Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே மனதில் தோன்றும் எல்லாமே மறைக்க முடியா தருணங்களாய் மடியும் நிலைக்கு வந்துவிடும் மலையும் கடலும் வானமும் மரமும் செடியும் கொடியுமே மனதில் பாரத்தைக் குறைத்திடும் மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும் தோழமைத் துணிவும் சேர்ந்ததும் தொடரும் துன்பமும் விலகிடும் தொடரும் நட்பின் ஆதரவால் தொல்லைகள் மறைந்து சென்றிடும் இதயம் உணரா மனிதருக்கும் இனியவை செய்திடசொல்லிடும் இன்பம் தந்திடும் செயல்களை இனியும் செய்ய வைத்திடும் கலக்கம் வேண்டாம் நண்பனே கடவுள் போல வந்தேனும் கருணை கொண்டு உதவியாய் கடந்து செல்ல வைப்பார்கள் (கவியாழி)

புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு

Image
நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால்  அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள். நான் அறிமுகம் செய்து பேசியபோது  மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன்  சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா  மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ் பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின் அகநாழிகை புத்தக வெளியீட்டாளர்  பொன் வாசுதேவன் உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன்  பொன்வாசுதேவன் வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (கவியாழி)

கடவுள் போலச் சொல்வார்கள்

உதவி செய்ய வருவோர்கள் உரிமையோடு  செய்வார்கள் உணரும் துன்பம் யாவையுமே உடனே தீர்க்கத்  துணிவார்கள் எண்ணம் முழுதும் உண்மையாய் என்றும் துணையாய் இருப்பார்கள் எதிலும் உரிமை சொல்லியே எளிதில் அன்பைப் பொழிவார்கள் ஊரும் பேரும் தெரியாமல் உற்ற நட்பு என்பார்கள் உள்ளம் முழுதும் தெய்வமாய் உணர்ந்துப் பழகி வருவார்கள் இன்றும் நட்பாய் ஒருசிலரே இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள் இதயம் நிறைந்து எப்போதும் இன்முகத்தோடு வாழ்வார்கள்  கடமை என்றே எண்ணியே கருத்தாய் செய்து முடிப்பார்கள் கடந்து வந்து வெற்றியக் கடவுள் போலச் சொல்வார்கள் (கவியாழி)

மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....

மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே மறுத்துப் பின்னால் வருந்தாதே புகழ்ச்சி மிகுந்து மயங்காதே பிறகு மயங்கி துடிக்காதே கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே தொலைத்து விட்டுக் கலங்காதே கிட்டும் வாய்ப்பை விலக்காதே கலங்கி உயிரைப் போக்காதே உழைத்து வாழ மறுகாதே உயர்வு உனக்குக் கிடைக்காதே ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ உறங்கி வாழ்வை இழக்காதே தொடுத்த சொல்லால் துணையைநீ தொடரும் சொந்தம் முடிக்காதே தொலைத்து விட்ட வாழ்கையே தேடிச் சென்றும் கிடைக்காதே பெண்கள் கல்வி கொடுக்காமல் பிறந்த வாழ்வைக் கெடுக்காதே பிறப்பை தவறாய் நினைக்காமல் படிப்பைத் இடையில் நிறுத்தாதே கெடுத்தும் வாழ்வு வாழாதே கெட்டப் பின்பு துடிக்காதே கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே கொடுக்கும் நன்மை உணர்வாயே?

பொங்கலைக் கொண்டாடுவோம் .....

உலகத்துத் தமிழரெல்லாம் ஒற்றுமையாய்ச்   சேர்ந்திருந்து தமிழன்னை மகிழ்ந்திடவே  தவறாமல் பொங்கல் வைப்போம் நல்லோரை நாடிச் சென்று நல்வாழ்த்து சொல்லிடுவோம் நம்மக்கள் மனம்மகிழ நாடிச் சென்று உதவிடுவோம் புத்தாடை  தனையுடுத்தி  புதுப்பானை பொங்கலிட்டு தலைக்கரும்பு மஞ்சளுடன் தலைவாழை இலைபோட்டு உலகாளும் சூரியனுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்வோம் உயரும் வழி என்னவென்று உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை தமிழில் இல்லா வார்த்தைகளில் பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர் பாசம் கொண்டே அழைத்திடுவீர் நேற்றும் நடந்தக் கதைகளையே நேசம் கொண்டே பேசிடுவீர் நேர்மை வீரம் சத்தியத்தை நேரில் கண்டேப் பேசிடுவீர் ஊரும் உறவும் உள்ளதென உரிமைச் சொந்தம் நல்லதென பேரும் புகழாய் வாழ்ந்திருந்த பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர் வீரம் மிகுந்த தமிழர்களின் வேட்கை நிறைந்தப் பாட்டுகளும் வீதியில் சூழ்ந்தே விளையாடி விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர் தாழ்ந்த உணர்வும் இன்றில்லை தரணி முழுதும் கொண்டாடி தமிழர் திருநாள் பொங்கலையே தமிழர் அனைவரும் பொங்கிடுவீர் மஞ்சள் கரும்புடன் படையலிட்டு மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு பொங்கலை வைத்துப் படையலிட்டு புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர் பொங்கலே பொங்குக என்றுரைத்து பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து மங்கள நாளில் ஒற்றுமையாய் மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர் (கவியாழி)

திருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்

Image
கிராமத்துப்  பின்னணி உள்ள இந்த அட்டைப் படத்தைப் பார்க்கும்போது இவர் கிராமத்தை விரும்பி ரசிக்கும் எழுத்தாளர்  என்பதும்  படத்திலுள்ள சிறுமி செல்வி.சம்ப்ரித்தா(அவருடைய பேர்த்தி)  இவரது உறவுக்கு அய்யனாரைப் போன்று பாதுகாவலராய் இருப்பார் என்பதும் தெளிவாகப் புலனாகிறதல்லவா? இந்தப் புத்தகத்தில் உள்ள "சாந்தி நிலவ வேண்டும் " என்ற சிறுகதைக்காக பிரபா ராஜன் அறக்கட்டளையின் சார்பாகக் கலைமகள்  பத்திரிகை நடத்திய  சிறுகதைப் பரிசுபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றபோது எடுத்த படம். மணிமேகலை பிரசுரமும் இணைந்து நடத்திய விழா.                               ஹரணி (முனைவர் க அன்பழகன்) தமிழ்ப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம். சொல்லியது............     "ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்." இன்றைய புதிய தலைமுறை  எழுத்தாளார்களின்    அதிக புத்த

ரசித்தவர்கள்