Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து  தவிப்பவரே வெறுப் படைந்து  வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை  நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)

அதிகாலைப் பனிபொழிவால்.....

Image
அதிகாலைப் பனிபொழிவால் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் அதன்பின்னே  மழைத்துளியும் அடிக்கடியும் தூரட்டும் மிதமாக மழை பெய்தும் மீண்டும் மகிழ்ச்சி  இருக்கட்டும் பதமாக சிணுங்கலோடு தொடக்கம் பக்குவமாய்  உணர்ந்து ரசிக்கட்டும் இடையிடையே கதைச் சொல்லி இதமாக தழுவ வேண்டும் இடியுடன் மழை பொழிந்தால் இறுக்கி அணைக்க வேண்டும் மெலிதான மெல்லிசையை மெய்மறந்து கேட்கவேண்டும் மேனியெங்கும் சிட்டெறும்பாய் மெதுவாக கவ்வ வேண்டும் உடலெங்கும் கொடிபோல தழுவ வேண்டும் காதல் உணர்சிகளை எழுச்சியுடன் ஒற்றுமையாய் தீண்டவேண்டும்

பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....

குற்றம் மட்டும் சொல்லாதீர் குறையைச் சுட்டி நகைக்காதீர் சுற்றம் நட்பும் சேர்ந்தேனும் சொல்லி  மாற்ற தவறாதீர் நக்கல் செய்து பேசுவதும் நல்லதைச் சொல்ல மறுப்பதுமே சிக்கல் கொண்டு இருக்கையிலே சொல்வதை முனைந்து சொல்வீரே அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள் ஆளுமை கற்க உதவுங்கள் மாணவ பருவ  வாழ்கையுமே மகிழ்ந்தே இருக்க வைப்பீரே அக்கம் பக்கம் பழகுவதை அருகில் உள்ள நண்பர்களை சுற்றம் உறவும் இருப்பதையுமே சொல்லி புரிய வைத்திடுங்கள் நிச்சயம் முடிந்தால் கல்விக்கு நேரமும் பணமும் செலவழித்து பக்கத் துணையாய் இருப்பீரே பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே

பிறப்பே தவறாய் எண்ணுதடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்   அம்மாவும் இல்லாத அறிவை   இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாமல் போலியாய்த் தேவையென நடித்து தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்   உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி   @@@@@@

மனமே மீண்டும் வருந்தாதே.......

மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே மகிழாதோர் இல்லை தினமே நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே நெஞ்சுருக மகிழ்வோர் பலரே நேசிக்கத் தெரியா மனிதன் நேசமற்ற மனிதன் உள்ளத்தில் நாளும் தாவும் குரங்கு-மனிதன் நிம்மதி மறந்த விலங்கு காணும் காட்சிகள் அவலங்கள் கண்டும் காணா உள்ளங்கள் தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே தேடிக் காணா உண்மைகள் வெறுமையான மனித உள்ளம் வேதனையில் தவிக்கும் இல்லம் வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று விதியல்ல இது மெல்லோர்க்கும் பணமில்லை சிலருக்கு வாழ குணமில்லை கொடுத்துமே உதவ தினம் வருகின்ற தேவையே-என்றும் தீராத ஆசை நோயே மனமே மீண்டும் வருந்தாதே மனிதனின் நிலையால் கலங்காதே குணமே இதுவென வழுவாதே-எல்லா குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே (கவியாழி)

சாலை விதியை மதிப்பீரே

Image
       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி , கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்  இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும். சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம், பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள்

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே மாற்றம் செய்ய வையுங்கள் மனதில் துளியும் அன்புடனே மனிதனாக வாழச் சொல்லுங்கள் செல்வம் அதிகம் சேர்ந்தாலே செல்லும் வழியும் தடுமாறும் சொல்லில் வார்த்தை  தவறாகி சொந்தம் தள்ளி உறவாடும் சொந்தமும் நட்பும் இல்லாமல் சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும் செல்லும் வழியில் சிலரேனும் சிரித்துப் பேசச் செய்திடுங்கள் குற்றம் குறைகளை நல்லதை குணத்தை மாற்றி வாழ்வதை சுற்றமும் நட்பும் உணர்ந்ததை சொல்லிப் புரிய வையுங்கள் அருகில் இல்லா உறவுகளால் அதிகத் துன்பமும்  வருவதையும் அன்பே இல்லா மனிதர்களின் அடைந்த நிலையை காட்டுங்கள் மனித வாழ்க்கை உணர்வதற்கு மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு மனிதம்  மனதில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம் (கவியாழி)

ரசித்தவர்கள்