பொறுப்பில்லா பிள்ளையினால்....
பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து தவிப்பவரே வெறுப் படைந்து வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)