Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே விரும்பி உண்டு வந்தோர் வேதனையாய் இன்று ஏனோ வேண்டாமெனத் தள்ளி வைத்து பச்சைக் காய்கறிகள் தின்று பகல் வருமுன்னே விழித்து பாதம் வலிக்க நடந்தும் பயிற்சிகள் பலவகை செய்தும் உணவைக் கொஞ்சமாய்  குறைத்து உலர் பழங்கள் அதிகம் சேர்த்து உண்டதை எல்லாமே மறந்து உடலை வருத்தியே தினமும் காலை மாலையென பகிர்ந்தே கணக்காய் உணவைத் தின்று வேளை வரும்போது மாத்திரையை வேதனையுடன் தின்று வாழும் இனிப்பை மறந்தும் இனிமையாய் இன்னும் மன உறுதியுடன் சிறப்பாய்  வாழ்ந்து வரும் சொந்தங்களே நட்புகளே வாழ்க (கவியாழி)

அடங்காத முத்தங்கள் ஆயிரம்

ஆயிரம் முத்தம் தந்தும்  அடங்காத ஆசை கொள்வாள்  அடுத்தவர் முன்னே மகிழ்ந்து  அணைத்து மீண்டும் தருவாள்  தீராத அன்புடனே இருப்பாள்  தினமும் ஆவல் கொண்டே  திரும்பத் திரும்ப உணர்வாய்  கரும்புபோலக் கடிப்பாள்  தேக்கிவைத்த ஆசையெல்லாம்  தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே  திகட்டத் திகட்டத் தருவாள்  தீரும்வரை இணைந்தே மகிழ்வாள்  வெளியில் தெரியாத வெட்கத்துடன்  வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள்  வெளியூர் சென்றால் ஏங்கியே  வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும்  கட்டியணைத்து முத்தம் தந்து  கன்னத்தைக் கடித்தும் விடுவாள்  காலையும் மாலையும் தொடர்ந்து  கதைகள் கேட்டும் தருவாள்  நெஞ்சின் மீதேறி நெடுநேரம்  நிம்மதியாய் தூங்கி விடுவாள்  நேரத்தைக் குத்தகை கேட்டு  நீண்ட நேரம் முத்தமிடுவாள்  சத்தமில்லா முத்தங்கள் எத்தனை  தித்திக்குமே என்றென்றும் அதனை  வாடிக்கையாய் கிடைத்தால் தினமும்  வாராது துயரம் அதனால்  அன்பான முத்தங்கள் இழந்தே  அருகில் யாரும் உள்ளாரோ  இனிமை மறந்த முத்தம்  இடுவோர் யாரும் உளரா  (கவியாழி)

அவளன்றி மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது (கவியாழியின் மறுபதிவு)

சுதந்திரம் எமக்கும் வேண்டும்

வேண்டும் வேண்டும் மனதில் வேதனை மறைந்திட வேண்டும் தாண்டும் உயரம் யாவும் தடைகளைத் தாண்டிட வேண்டும் சுதந்திரம் எமக்கும் வேண்டும் சூழ்நிலை மாறிட வேண்டும் மனிதருள் ஒற்றுமை வேண்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்திட வேண்டும் வாழ்வில் நிம்மதி வேண்டும் வசந்தமும் மீண்டும் வேண்டும் வலையில் மீண்டும் எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை மகிழ்ச்சியாய் சந்திக்க வேண்டும் தீண்டும் பணிகள் யாவும் தீர்ந்திட நிம்மதி வேண்டும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் (கவியாழி)

இந்த நிலைக்குக் காரணம் யார்?

வனமும் வனப்பையும் இழந்ததால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

உண்மை வாழ்வு...

முதுமையைத் தேடி செல்பவர் யாரோ முறையாய் அதையும் தடுப்பவர்  உளரோ மூன்றும் மூன்றும் ஒன்பதைத் தவிர்க்க முடிந்தால் கணக்கை மாற்றிடத் துணிவோ காலைமாலை என்பது உண்மை என்றால் கடவுளும் செயலும் நம்பிக்கை என்றால் நேரமும் பொழுதும் மாறுதல் நன்றாம் நிம்மதியைக் கெடுப்பது மட்டும் எதனால் சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும் சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால் எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார் அவரவர்  வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால் அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால் அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால் அகிலம் முழுதும் அன்பே வாழும் படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு பகலும் இரவும் செய்யும் நிகழ்வால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைப்பது போல கிடைத்த அனைத்தும் மகிழ்ச்சியே என்று (கவியாழி)

புருசனையே காவல் வைத்து.....

தண்டசோறு தின்னாலும் புருஷன் தன்னருகே வேண்டுமென்றும் தன்குடும்பம்பிள்ளையோடு தானும் வாழ்க்கை வாழ வேண்டி ரெண்டுவேளைக் கோவிலுக்கும் ராப்பகலாய் வேலை செய்தும் கண்டவரும் மெச்சும்படியும் கண்கலங்கா வைத்திருந்து பெண்டுபிள்ளை இந்த காலத்தில் பத்தினியாய் வேலைசெய்து பிள்ளைகளைக் படிக்க வைத்து புருசனையே காவல் வைத்து கண்டதையும் திண்ணாமல் வீட்டில் காத்திருக்கும் வீட்டுக்காரன் பிள்ளைக்குமாய் சொத்துபத்து சேர்த்து வைத்து சொன்னபடி கடனைக் கட்டியே உண்ண மறுத்தாலும் தொடர்ந்து உழைத்து உறங்க மறந்தாலும் குடும்ப நலனாய் எண்ணம் முழுதும் கணவன் வாழ எல்லா கோவிலுக்கும் செல்வது முறையா (கவியாழி)

ரசித்தவர்கள்