Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

"காளியூட்டு " நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்

Image
      கடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால்  ஆழ்வார்பேட்டையில்  உள்ள "  TAG  " சென்டரில்  இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது .  எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. "பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம்  கொண்ட ஆளுமையில் " படைக்கப் பட்டிருக்கிறது அய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:    நூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே  பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்."அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது" ,"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் " என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார். திருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது; "மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்" முனைவ

கவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்

Image
திருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன். நான் "தமிழ்மாமணி" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான்  சந்திக்கச் சென்றிருந்தபோது  எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் கவிஞர்.பாரதிதாசன்.தமிழ்மாமணி புலவர் .எழில்நிலவன்,கி.பாரதிதாசன் அவர்களின் தந்தையும் கலைமாமணி,புலவர்.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் நானும் அவரும் தமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்                                                மகனும்                                  தந்தையும் தமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும்  இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது மேலும்...... புலவர் கி.பாரதிதாசன்  அவர்கள் எழுதிய "ஏக்கம் நூறு" கனிவிருத்தம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

இனிமேல் கணக்கைத் தொடங்கு...

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை இனிமேல் பனியும் குறைந்து இளமை செடிபோல் வளர்ந்து உறவும் மகிழ்வாய் இருந்து-மக்கள் உடனே கணக்கைத் தொடங்கு (கவியாழி

சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...

Image
05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு  பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர்  சேர்ந்தேன் அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக  கூட்டமோ  நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு  உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள் அருகில்  ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம்  இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என  என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும்  சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான  தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது. திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விர

வாழ்த்து

Image
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள்.எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

இன்றும் வாழும் பாரதியே....

Image
இன்றும் வாழும் பாரதியே எப்படி மறப்பேன் உனையே ! எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்! உன்னை விட்டு வைத்தால் உலகையே மாற்று வாயென, பெண்மை யொத்த சிலரால்-மனதால் பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய் கண்ணைபோல் வளர்த்த மகளை கலப்புத் திருமணம் செய்து கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி கண்குளிர பார்க்க எண்ணியதை, திண்ணைத் தோறும் சென்று தீராப்பழி சுமத்தி வந்தோர் பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி திருமணம் செய்து வைத்தார் கண்ணை இழந்துக் கலங்கிக் கடின வாழ்க்கை வாழ்ந்தும் காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால் கண்துயில வைத்து விட்டனரே! (கவியாழி) 

ரசித்தவர்கள்