தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்

இயற்கையை மனிதன் அழித்தனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ

மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ

பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழ பணித்தாயோ



கவியாழி.கண்ணதாசன்
07.04.2020- சென்னை




Comments

  1. இன்னும் உணர வேண்டியது அதிகமுள்ளது...

    ReplyDelete
  2. யதார்த்த நிலையைச் சொல்லும் அருமையான கவிதை...தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்ல கவிதை. உணர்ந்து கொண்டால் நல்லதே.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்