சித்தமும் கலங்கிட செய்தாயோ ?
தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ
தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்கு
பணமும் பொருளும்பயனின்றி-மக்களின்
பாசம் நேசம் பகிர்ந்தாயோ
அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே
பூமியின் சுழற்சியை புரிய வைக்க
புத்துயிர் மக்களை தெளிய வைக்க
நித்தமும் நிம்மதி யிழக்க செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிட செய்தாயோ
கவியாழி. கண்ணதாசன்
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ
தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்கு
பணமும் பொருளும்பயனின்றி-மக்களின்
பாசம் நேசம் பகிர்ந்தாயோ
அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே
பூமியின் சுழற்சியை புரிய வைக்க
புத்துயிர் மக்களை தெளிய வைக்க
நித்தமும் நிம்மதி யிழக்க செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிட செய்தாயோ
கவியாழி. கண்ணதாசன்
அப்படித்தான் தோன்றுகிறது...
ReplyDeleteஇயற்கையை வணங்குவோம்...
நலமே விளையட்டும்.
ReplyDeleteஎவ்வளவு நாட்கலாகிவிட்டன கவியாழியை நான் பார்த்து
ReplyDeleteதொடர்க தோழர்