தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தமும் கலங்கிட செய்தாயோ ?

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ

தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்கு
பணமும் பொருளும்பயனின்றி-மக்களின்
பாசம் நேசம்  பகிர்ந்தாயோ

அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே

பூமியின் சுழற்சியை புரிய வைக்க
புத்துயிர் மக்களை  தெளிய வைக்க
நித்தமும்  நிம்மதி யிழக்க செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிட செய்தாயோ

கவியாழி. கண்ணதாசன்



Comments

  1. அப்படித்தான் தோன்றுகிறது...

    இயற்கையை வணங்குவோம்...

    ReplyDelete
  2. எவ்வளவு நாட்கலாகிவிட்டன கவியாழியை நான் பார்த்து

    தொடர்க தோழர்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்