Posts

Showing posts with the label கவிதை/சமூகம் /நட்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு

அருகில் வந்ததும் முகம் மலரும் ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே எற இறங்க மனதை அளந்து பார்க்கும்  புரியும் வரையில் கேள்வி கேட்டு புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும் மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும் உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம் உள்ளம்  வரையில் ஊர்ந்து சென்று தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே தைரியமான  நல்ல வார்தைகள்  சொல்லும் மனதில் ஓடும் சிந்தனை தனக்கு  மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும் தனமும் உடலும்  தவிப்பதை கண்டு -கண்கள் கனமே உணர்திக் கைகளைப் பற்றி தினமே பழகும் நட்பாய் இருந்தும் தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி முகத்தைப்   பார்த்து அகத்திதில் புகுந்து முடிவில் உண்மை நிலையைக் காணும் கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை கடந்தும் நட்பே  என்றும் வெல்லும் கவியாழி....... சென்னை

ரசித்தவர்கள்