சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு
அருகில் வந்ததும் முகம் மலரும்
ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே
என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே
எற இறங்க மனதை அளந்து பார்க்கும்
புரியும் வரையில் கேள்வி கேட்டு
புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும்
மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே
மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும்
உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம்
உள்ளம் வரையில் ஊர்ந்து சென்று
தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே
தைரியமான நல்ல வார்தைகள் சொல்லும்
மனதில் ஓடும் சிந்தனை தனக்கு
மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும்
தனமும் உடலும் தவிப்பதை கண்டு -கண்கள்
கனமே உணர்திக் கைகளைப் பற்றி
தினமே பழகும் நட்பாய் இருந்தும்
தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று
பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே
பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி
முகத்தைப் பார்த்து அகத்திதில் புகுந்து
முடிவில் உண்மை நிலையைக் காணும்
கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை
கடந்தும் நட்பே என்றும் வெல்லும்
கவியாழி.......
சென்னை
நட்பின் சிறப்பு அருமை...
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDelete