Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/வறுமை

தெய்வங்கள்

தெய்வங்கள்

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

எங்கும்போகலை எதையும் பார்க்கல எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய் தினமும் தூக்கியும் பொழுது கழியிலே கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும் ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை கொண்ட உறவும் நீண்ட பிரிவால் கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்  கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட- சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில் செலவு செஞ்சிட பணமும் கையில்லை கவியாழி.கண்ணதாசன் 27.06.2020

ரசித்தவர்கள்