Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பெண்மையின் பேரின்பம்

Image
       நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக தாலி கட்டியதும் தவம் ஆரம்பம் தனியறையில் நாளும்   ஏற்படும் பூகம்பம் தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை தாகமது மட்டும் தணியும் முடியும்! கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல் சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில் சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்! அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள் வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்! பிறக்குமுன்னே பிள்ளை   செய்யும் சேட்டையை பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள் பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்! நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை எல்லோர் நினைவில் சொல்லி வைத்து பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்

இனிமை உலகத்தை ரசிப்போம்

Image
    அவள்:மேலோட்டமாய் பார்க்காதே              மேனியை திருடாதே-எதிர்பார்த்து              மேலும் கீழும் பார்த்து              மெதுவாய் தொடாதே அவன்:மெல்லிய காற்றும்              மிதமான சூழ்நிலையும்-தொட்டு              துள்ளிவிளையாட  தோணுது              தயக்கமாய்  இருக்குது               அவள்:அப்படி பார்க்காதே              அருகில் வராதே -இருந்தாலும்              அள்ளி அணைக்கத்தான்              ஆசையை தூண்டுது அவன்:இன்னும் ஏனோ               இணக்கம் தானோ-இப்போது               இனிமை  நமக்கு               நல்ல சமயம்தானே அவள்:சொல்லி பார்த்தேன்              மனதை மெல்ல -மென்மையாய்              வெள்ளமென  அதை              உருக்கிவிட்டாய் அவன்:துள்ளி விளையாடியபின்              இல்லம் செல்வோம்-துவளாமல்              இணைந்து செய்வோம்              புனைதலில்  பேரின்பம் இருவரும்:எண்ணத்தில் இணைந்தோம்                     வண்ணமாய் கலந்து-வாலிப                     விருந்தை பகிந்திட்டோம்                     உண்மையாய் இருப்போம்        

எப்போதும் வேண்டும் !!

Image
நேசம் வேண்டும் நேர்மையாக வேண்டும் நெஞ்சுருகி  நாடவேண்டும்  நீ நியாயமாக இருக்க வேண்டும் கொஞ்சவும் வேண்டும் குறைகளை  அறிய வேண்டும் குற்றமெனில் கூற வேண்டும் கூடவே நீ  துணையாக வேண்டும் சுகமாக  வேண்டும் சுற்றத்தில் நீ வேண்டும் கற்றுதர நல்லவை வேண்டும் கடும் சொல்லால் திட்ட வேண்டும் நற்றமிழ் வேண்டும் நாளும் துணை வேண்டும் நல்லோர்கள் ஆசி வேண்டும் நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும் எப்போதும் வேண்டும் என்னுடனே நட்பு வேண்டும் எல்லாமுமாய் இருக்க வேண்டும் எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

இன்று அம்மாவாசை

Image
காலையில் எழுந்ததும் கடமையாக செய்வது மனதில் கருத்தாய் நிறுத்தி நினைவில் வைத்து இறந்த பெற்றோரை நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்! இந்த நாளில் மட்டும் சொந்த நாளாய் நினைகிறேன் பிள்ளை பருவத்தை மெல்ல நினைக்கிறேன் சொல்ல வார்த்தையில்லை சொல்வதில் வெட்கமில்லை சின்ன பிள்ளைபோல சாகும்வரை அன்புடன்  இருந்ததை! எப்போதும் உண்மையான எள்ளளவும் குறையாத அன்பினை உள்ளமெங்கும் உள்ளதை உள்ளபடி நினைத்து அழுகின்றேன்!!! ஒருபொழுது பட்டினியாய் உங்களை நினைத்து மடிகிறேன் எள் தண்ணியிட்டு எனது இறந்தோரை நினைத்து நல் மனதோடு நினைதிட்டு  நாள் முழுதும் விரதமும் உங்களை நினைத்து உளமாற நினைக்கும் நாள் இந்த  நாள் மட்டும் இமைகளுக்கு  இருப்பதில்லை உறக்கம் என்றுமே மறந்ததில்லை உங்களின்  அன்பான ஏக்கம்

அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?

Image
http://tamilmanam.net/ உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வ

நாய்க்குட்டி.....செல்லமே.

Image
  மனிதன்  என்னை மதிக்கா விட்டாலும் மண்டி இட்டு நன்றி சொல்லும் மனதுள் என்னையே தினம் நோக்கும்-மகிழ்ச்சியாய் மதித்து வாலாட்டி நன்றி செய்யும் என்னைப் பார்க்க யார் வந்தாலும் முன்னே வந்து முறைத்து நிற்கும் பின்னே சென்று சுற்றி வந்து-முகர்ந்து பின்னங் கால்களை ஒட்டி நிற்கும் கருப்பாய்  நிறம் கொண்டிருந்தாலும் அது பொறுப்பாய் தான் இருக்கும் அருமையாக வெறுப்பாய் நான் திட்டி சொன்னாலும்-நகராது வெகு அருகில் நின்று கொண்டிருக்கும் செல்லமாய் சீண்டி அதட்டி விட்டால் சீக்கிரம் பயந்து குரைத்து விடும் ஆத்திரம் கொண்டு அடித்து விட்டால்-பிறரை அடுத்த நொடியே கடித்து விடும் பொன்னை  பொருளை காத்து நிற்கும் புதிதாய் இருந்தால் நுகர்ந்து செல்லும் மண்ணையும் மனதில் பதிந்து கொண்டு-நினைவாய் மண்டியிட்டு உடனே  நக்கி திண்ணும் தூங்கும் போதும் அதன் கவனம் துணையாய் மட்டும் தான் இருக்கும் நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை உள்ளபடி  சொல்வ தென்றால் ஒவ்வாமை பெற்றோரும் நண்பர்களும் மனைவியும் மகளும் மற்றோரும் மறந்தாலும் மறவேனே உன்னை உற்ற  நண்பநென பற்றோடி ருப்பேன்-இன்பமாய்  உயிருள்ளவரை உன்னை  நன்ற

முதுமையின் ஏக்கம்

Image
அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

ரசித்தவர்கள்