Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....

Image
எனக்கு அப்போது 36 வயது , நான் சென்னையில் எனது (United India Insurance)காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து மனைவி மகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தேன். நான் அப்பா அம்மாவை பார்க்க நினைத்தாலும்  அடிக்கடி எனது சொந்த ஊரான சேலத்திற்குச் செல்வதில்லை .ஊரில் எனது இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் 32 பேரன் பேத்திகளும் மற்றும் எல்லா உறவினர்களும் வசித்து வருகிறார்கள் இருந்தும் என்னையே வரவழைப்பார். நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டி அவராகவே பொய்யான காரணத்தைச் சொல்லி உடல்நிலை சரியில்லை,மனநிலை சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்து என்னை வரவழைப்பது வழக்கம்.நானும் நேரில் சென்ற உடன் எழுந்து என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பார் அதைப் பார்க்கும் எனது அண்ணனும் தம்பியும் செல்லமான பொறாமையுடன் ,நீயே சென்னைக்கு அழைத்துச் செல் என்று சொல்வார்கள். அப்பா என்னைப் பார்த்து சிரித்து நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்பார். இதே கார்த்திகை மாதத்தில் அப்போது அவருக்கு வயது 83 இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தார்.அப்போது சிறிய அளவில் கால்வீக்கம் மற்றும் கால்வலி வந்து நடக்க முட

மூத்தப் பதிவருடன் கவிஞர்.நா.முத்துநிலவன்

Image
 நா,முத்துநிலவன் அவர்களின் சென்னை சந்திப்பு 18.11.2014அன்று கவிஞர் .நா.முத்துநிலவன் அவர்கள் சென்னை வருவதாகவும் .அவர் வரும்முன் நான் புலவர்.ராமானுசம் ,கவிஞர் .மதுமதி ஆகியோரைப் பார்க்க விரும்புவதாகவும் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார்.நான் அவரை மாம்பலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி விடுமாறும் அங்கிருந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றேன் மாலை ஆறு மணிக்கு சொன்னபடியே நான் காத்திருந்து  அவரை நான் மாம்பலம்  தொடர்வண்டி நிலையத்திலிருந்து புலவர் அய்யா வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.பின் கவிஞர்.மதுமதியும் உடன் சேர்ந்து கொண்டார்.அப்போது எங்களது கடந்த கால பதிவர் சந்திப்புகள் பற்றியும் நடைமுறை சிக்கல்கள் என்ன ?  நீங்கள் ஏன் வரவில்லை ?உங்களை அங்கு சந்திக்காதது எங்களுக்கு ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்லி . வருத்தப்பட்டார். பதிவர் சந்திப்பில் பார்க்க முடியாததால் நேரில் வந்து விசாரித்ததுடன் மூத்தப் பதிவர்.புலவர் அய்யா அவர்களை நேரில் கண்டு நலம் விசாரித்ததுடன் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஆலோசனைகளையும் கேட்டு இன்னும் வரும்காலத்தில் எப்படி சிறப்பாக நட

சிறைபிடிக்கும் மழலைகளே....

மெல்ல மெல்ல தாவிவந்து  மேனியோடு  சேர்ந்த ணைத்து எல்லையில்லாக் குறும்பு செய்யும் எனதருமைக் குழந்தைகளே வண்ண மயில் போலவும் வயதையொத்துப் பாடவும் சின்னதாகக் கதையைச்  சொல்லி சிரித்து விளை யாடவும் எண்ணமெல்லாம் ஓரிடத்தில் எளிதில் நம்மை வசப்படுத்தி சின்னக் சின்னக் குறும்புகளில் சிறைபிடிக்கும் மழலைகளே பள்ளி செல்லும்போது மட்டும் பார்வையாலே சிறைபிடித்து எல்லையினைத் தாண்டிச் சென்று ஏன்அழுது செல்லுகிறாய் கண்ணெதிரே வளர்ந்துநீ கல்வியிலும் சிறந்திடவே புன்னைகையைத் தந்துவிட்டு புகழுடனே நன்கு படிப்பாய் (கவியாழி)

கட்டிளங் காளையரும்.....

கொட்டி மழைப் பொழிகிறதே கொட்டோ வென்றே  குடையெல்லாம் பறக்கிறதே அய்யோ வென்றே தட்டிவீடும் நனைகிறதே சொட்டுசொட் டென்று-ஏழைக்கு  தங்குமிடம் கிடைக்கவில்லை  எங்கும் சென்றே பட்டித் தொட்டி கழனியெல்லாம் வெள்ளமாக பயிரெல்லாம் அழுகுவதால் உள்ளம் ஏனோ கட்டவிழ்ந்த  நிலையில் மனதைக் கண்டு-விவசாயி கண்ணீரில் நீந்துகிறான் கனத்த மழையால் கட்டிளங் காளையரும்  நொந்து போக காடுமேடு இருப்பதுபோல் சாலை யெங்கும் திட்டுத்திட்டாய் இருக்கிறதே எல்லா திசையும்-வேலைக்குத் திட்டிக்கொண்டே செல்லுகிறார் சாலையிலே விட்டுவிட்டு மழைப் பெய்வதாலே பெண்கள் வீட்டில் இருந்தால் எல்லோருக்குமே கும்மாளமாம் கெட்டிக்கார கணவன் மார்கள் மகிழ்ச்சியாக-இன்று கேட்டதெல்லாம் வாங்கித்தருவார் மகிழ்ச்சியாக (கவியாழிகண்ணதாசன்)

அய்யா.ஆ.சிவலிங்கனார்.மறைவு-வாழ்த்துப்பா!

Image
அய்யா.ஆ.சிவலிங்கனார் அவர்களுக்கு அஞ்சலி            10.07.2014 அன்று அய்யாவுடன் புலவர் குட்டியாண்டி (எ)திருநாவளவன், .  புலவர்.இராமனுசம்,புலவர்.கி,த.பச்சியப்பன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் நானும். தங்கமான எங்களாசான்                                                               ************** தங்கமான எங்களாசான் தமிழை மட்டும்     ஊட்டவில்லை, இளமையில் நாங்கள் செய்த கொங்குதமிழ்க் குறும்புகளோ கொஞ்சமல்ல;     கோதில்லாப் படிப்புக்கும் பங்க மின்றி மங்கையர் உடன்பயிலும் வகுப்பில் நீங்கள்    மாத்தமிழைக் கற்றலோன்றே குறியாய் நிற்பீர் சங்கடங்கள் வந்துவிடும் சார்ந்த கல்வி    நின்றுவிடும் எண்ணியதைப் பாரீர் என்பார்; பொங்குதமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு மாவார்    புரியவைக்கும் ஆற்றலிலும் பொறுமை காப்பார் தங்குதடை இல்லாமல் தமிழில் பாட்டுத்    தந்திடுவார் மேற்கோள்கள் பலவும் காட்டி; சங்கநூல்கள் சதுராடும் இவரின் வாயில்     சாந்துணையும் தமிழ்படிக்கத் தூண்டும் சொற்கள் நுங்கினைப்போல் உண்டுண்டு மகிழ்ந்த நாளை     நும்மிடத்தில் எடுத்துரைக்கக் காலம் போதா!

அய்யா புதுவை எழில் நிலவன் (புலவர்.சீனு.ராமச்சந்திரன்

Image
அய்யா புதுவை எழில்நிலவன் (எ) சீனு.ராமச்சந்திரன் ******** புதுவை தந்த பாரதிபோல்  புரட்சிப் பாரதி தாசனைப்போல்  இவரும் தமிழைப் படித்தறிந்து-தவறாய்  இமியின் அளவும் வாராமல்  அகவை எழுபது வயதிலுமே  அனைவரும் மெச்சும் வல்லவராய்  அங்குமிங்கும் எவ்விடமும்-தமிழை  அழியா வண்ணம் காத்திடவே  சிலம்புச் செல்வர் அடிதொற்றி  சிறந்தே தமிழை மெருகூட்டி  தினமும் தமிழே உயிர்மூச்சாய்-எல்லா  திசையும் சென்று பாடுகிறார்  கவிதைக் கதைகள் நாடகமே  காவியம் சொல்லும் நடிகராக  இளமைக் காலம் முதற்கொண்டு-தமிழை  இன்றும் விரும்பிக் காதலித்தும்  பலரைப் போற்றிப் பாவடித்தே பழைய நினைவை மறக்காமல்  புத்தகம் வடிவாய் உருவேற்றி-நல்ல  புதிய சரித்திரம் படைத்துவிட்டார்  இளைஞர் பலரும் விளையாட  இவரோ விரும்பியது தமிழைத்தான்  இன்றும் அன்றுபோல் இளைஞராக  இனிதே தமிழை  உயிர்மூச்சாய்  கடுகின் அளவும் குறைவின்றி  கருத்துப் பிழைகள் நிகழாமல்  விருத்தம் ஓசை சந்தத்துடன்-கவியை  விரைந்தே மகிழ்ந்துப் பாடுகிறார்  அய்யா இன்றும் ஏக்கமுடன்  அழியாத் தமிழை விருப்பமுடன்  அனைத்துப் புதி

சுற்றமும் நட்பும் உறவாய்.....

விதவை மணம் மறுத்து வீதியிலே செல்லும்போது கதைகள் பல சொலலி காயப் படுத்வோர் பலராம் உறவும் அறுந்து  வாழ்க்கை உணர்வும் மடிந்து சிலரோ துறவம் இருந்து வந்தால் துன்பம் அங்கே மிகுமாம் வாழ்வும் இன்பம் தொலைத்தார் வறுமை கொண்டே வாழ்வோர் ஊரும் உறவும் பிரிந்து உலகம் பலதும் சென்றும் காணும் மக்கள் எங்கும் கன்னித் தமிழைப் போற்றி நாளும் இருந்து வருவோர் நாவில் இதுபோல் வேண்டாம் சுற்றமும் நட்பும் உறவாய் சேர்ந்து வாழ்ந்து வருவீர் குற்றம் குறைகள் மறந்து குலமே தமிழாய் வாழ்வீர் (கவியாழி)

ரசித்தவர்கள்