Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...

Image
05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு  பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர்  சேர்ந்தேன் அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக  கூட்டமோ  நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு  உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள் அருகில்  ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம்  இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என  என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும்  சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான  தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது. திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விர

வாழ்த்து

Image
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள்.எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

இன்றும் வாழும் பாரதியே....

Image
இன்றும் வாழும் பாரதியே எப்படி மறப்பேன் உனையே ! எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்! உன்னை விட்டு வைத்தால் உலகையே மாற்று வாயென, பெண்மை யொத்த சிலரால்-மனதால் பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய் கண்ணைபோல் வளர்த்த மகளை கலப்புத் திருமணம் செய்து கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி கண்குளிர பார்க்க எண்ணியதை, திண்ணைத் தோறும் சென்று தீராப்பழி சுமத்தி வந்தோர் பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி திருமணம் செய்து வைத்தார் கண்ணை இழந்துக் கலங்கிக் கடின வாழ்க்கை வாழ்ந்தும் காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால் கண்துயில வைத்து விட்டனரே! (கவியாழி) 

பிடிவாதம் மனநோயா? ஊனமா?

          பிடிவாதம் என்பது தவறோ சரியோ ஆனால் இது எல்லா வயதினரையும்  விட்டு வைப்பதில்லை. எப்போதாவது அல்லது எப்பவுமே பிடிவாதத்தையே  இயல்பாக கொண்டவர்கள் நிறையப்பேர் உள்ளனர். தான் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு அவர்களே தம்மைத்தாமே சரி என்று சுயநிர்ணயம் செய்து பிடிதளராமல் தான் நினைத்ததையே செய்வார்கள்.          குழந்தைப்பருவத்தில் இருக்கும் பிடிவாதம் நாளாவட்டத்தில் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும், போகப்போக தனது குணத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் அன்பாகப் பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும். அப்படிப் பிடிவாதமாய் இருக்கும் பிள்ளைகள் அப்பா அம்மா சண்டையிட்டுக் கொண்டால் இது நம்மால் வந்த பிரச்சனையோ என்று அஞ்சி பின்பு சரியாகி விடுவார்கள்.           பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள் மாறி விடுவார்கள். இவ்வயதையும் தாண்டிய குழந்தைகள் அப்படியேதான் இருப்பார்கள். அதைப் பிறவிக்குணம் அப்பா,அம்மா மாதிரி  என்று பெற்றோரும் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் அது சரியல்ல. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப மாற்ற முயற்சித்தால் நிச்சயம் மாறி விடுவார்

சொல்வீரே... நல்லோரே...

இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து புகழை மட்டும் சொல்வீரே நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே நட்புடன் வாழச் சொல்வீரே எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து எதையும் மகிழ்ந்தே சொல்வீரே தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே (கவியாழி)

புயல் மழைக் காலங்களில்....

புயல் மழைக் காலங்களில் எங்கும் புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி அழையாத நண்பனாக உறவாடும் ஆறுநாள் தொடந்தே இருக்கும் அடிக்கடித் தும்மலும் அடங்காது அழும்படி செய்து விடும் தலைவலி மிகுந்து வேலை செய்ய தடையாக இருந்தே தொல்லையாக்கும் கயல்விழிக் காது தொண்டை கரகரவென்றே இருந்தும் வலிக்கும் அயல்நாட்டு மருந்து தின்றும் அடங்காமல் தொடர்ந்து வரும் ஐங்கடுகு சூரணதைக் குடித்து அடிக்கடி மிளகு ரசம் பருகி துளசி தூதுவளை செடியின் தூய இலைதனை மென்றாலும் வயல் நண்டு  ரசம் தொடர்ந்து வாரம் இருமுறை குடித்தால் வரும் துன்பம் நீங்கித் தீரும் வழக்கமான வேலைகள் தொடரும் (கவியாழி)

ரசித்தவர்கள்