விதவையாக்கியது யார்? வேதனை வேதனை சுமப்பது நான்?
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
கல்யாணம் கடமையாக பண்ணி வச்சாங்ககட்டமெல்லாம் பொருத்தம் பார்த்து-கண்ணியமாய்
கடவுளிடம் சொல்லிதானே சேர்த்து வச்சாங்க
பெற்றவரும் மற்றவரும் பொருத்தம் பேசி
சுற்றமும் நட்பும் சொந்தமும் சூழதானே
நற்றமிழ் நல்லோரும் நம்மூர் கடவுளின்-முன்னிபாக
பற்றினேன் பரவசமானேன் பக்தியால் உருகினேன்
இத்தனையும் செய்ததால் இனிமேல் பயமில்லை
இன்பத்துக்கு எல்லையில்லை யாருக்கும் பயமில்லை
பார்க்கும் போதெல்லாம் படுத்தேன் இணைந்தேன்-ஆனந்தமாய்
பக்கமிருப்பான் பிள்ளைகள் பிறந்ததும் என்றிந்தேன்
பிறந்த வீட்டில் பிள்ளைகளுடன் இருந்தபோது
இருந்த இடம் விபச்சாரியிடம் விருந்தானான்
வருந்தினான் வாங்கி கொண்ட நோயினால்-மருந்தால்
திருந்துவான் என நினைத்து தேடினேன் நிம்மதியை
எதையும் சொல்லவில்லை யாரிடமும் பேசவில்லை
மனதை கல்லாக்கி மாயந்துவிட்டான் தூக்கில்
மறுநிமிட செய்தியில் நான் மாயந்துவிட்டேன்-மனதால்
மணவாழ்வில் சாய்ந்துபோனேன் சறுகானேன்
குற்றம் செய்தது நானா அல்லது
கும்பிடும் தெய்வம் குற்றவாளி தானா
நம்பிய பெற்றோரா நண்பர்களா- நரகமாய்
நாள் நட்சத்திரம் நல்லோர் வாழ்தியதாலா
தெரியவில்லை புரியவில்லை திசைஎனக்கு
தெரியாத இளம்தளிர்கள் அறியவில்லை
புரியவில்லை போகும் நாட்கள் விளங்கவில்லை-விதவை
பெயரெனக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் கலங்கவில்லை
எனக்கும் வேண்டும் எதிரே வருவோரின்
ஏகாந்த பார்வையும் மனதில் தாக்கமும்
தூக்கமில்லா நாட்களின் துயரமும் எனக்கு-வாழ்வில்
ஏக்கமும் உள்ளது என்பதை உணர்ந்தானா
படைத்ததும் பள்ளியில் படிக்க வைத்ததும்
கிடைத்த மாப்பிள்ளை வசதியை பார்த்ததும்
கிரகபலன் நாள் நட்சத்திரம் கேட்டதும்- சாதனை
நரகத்தில் எனக்கேன் இந்த வேதனை
நல்ல பிள்ளைகள் இருந்தும் என்னபயன்
செல்லமாய் சிணுங்கி அள்ளி விளையாட
அவனில்லை ஆனாலும் ஆறுதலாய் இருப்பது-மனதில்
அவனை பழிவாங்க தேறுதலோடு வாழ்வேன் !!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...