வரதட்சணையா? வேதனையா?
கிழங்களே
கீழ புத்தி கொண்டோரே.......
நாள் முழுதும்
நல்லது செய்யாதவரே.......
மூடங்களே
மூளையில்லா மூடவரே.......
வாழவேண்டிய
வாரிசுகளை வஞ்சிப்பவரே.......
தாழ்ந்த புத்தியால்
தடம் மாறிய மிருங்களே.........
வாழ்க்கைக்கு
வழி சொல்லாத வயோதிகரே.....
இன்னுமா தேவை
இல்லறதுக்கு வரதட்சனை?
எண்ணிப்பார்
ஏமாரபோவது யாரென்று?
ஏய்காதே
எள்ளளவு எண்ணிப்பாரீர்!
எதிகாலத்தில்
உண்ண உணவின்றிருப்பீர் !
சொல்லொன்னா
சோகத்தை எதிர்கொள்வீர்
கள்ளமில்லா
நல்லுறவை காசாக்காதீர்!
கண்ணீரால்
கஷ்டத்தை வாங்காதீர்!
நல்வழி வழிகாட்டி
நன்றாக வாழ வையுங்கள்!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...