கன்னி பெண்ணே வருவாயா?
முக்குடமும் தளும்ப
முந்தானை விலக்கிவிட்டு
சொக்கிவிடும் சுந்தரியே!
சூரியனும் நானும்
சுட்டுவிட போகிறோம் ?
தாகமெனக்கு தருவாயா?
தங்கமேனியே வருவாயா?
தாகம் தீர்க்க குடம்
தண்ணீர் தருவாயா?
பூமியும் தெரியவில்லை
பொழுதும் அடங்கவில்லை
கூவும் குயிலும்
குரல் கொடுக்கும் தவளையும்
மேவி அழைக்குது
மேகமும் கருக்குது
மோகம் குறையவில்லை
மேனியோ அடங்கவில்லை
போக பெண்ணே நீ
போதை ஏற்றாதே!
பார்போரிடம் என்னை
தூற்றாதே தவறியும்,
கால சக்கரமும்
கண்டிப்பாய் உருண்டோடும்
கைபிடிக்க காத்திருக்கேன்
கரையேறி வருவாயா?
கனிந்த முத்தம்
தருவாயா கட்டியனைப்பாயா?
இராம.கண்ணதாசன்
சென்னை
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...