தெய்வங்கள்

தெய்வங்கள்

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு
நாடகம் போலவே இன்றி
நன்மையே செய்திடும் வல்லமை
நட்புக்கு உண்டாம் உண்மையே

எல்லையே இல்லையாம் அன்புக்கு
ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு
தொல்லையே இல்லாத நட்பினால்
துன்பமும் விலகிடும் இன்பமாய்

உள்ளதைக் கொண்டே தொடருமாம்
உண்மையைப் பேசியே மலருமாம்
ஊரும்  மாறிப் போனாலும்
உண்மை நட்பு மாறாது

பணத்தால் விலையோ போகாது
பண்பால் மறக்கக் கூடாத
மனத்தால் அன்றி நல்லன்பை
மனிதன் பெறவே முடியாது

நல்லவை மட்டுமே செய்யுமாம்
நன்மைத் தீமையைச் சொல்லுமாம்
எல்லையைத் தாண்டிய அன்புக்கு
எளிதில் பிரிவும் இல்லையாம்

பிள்ளைகள் பிறந்த பின்புமே
பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்
 நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே
நகைச்சுவை பொங்கச் செய்யுமாம்


-------கவியாழி--------



Comments

  1. நல்லதைச் சொல்லும் நட்பு
    நாடகம் போலவே இன்றி
    நன்மையே செய்திடும் வல்லமை
    நட்புக்கு உண்டாம் உண்மையே

    நலமான நட்பு .!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  2. நல்ல நட்பு நலமும் பலமும் தரும் மிக நன்று ...! அருமை வாழ்த்துக்கள்

    http://kaviyakavi.blogspot.ca/2013/12/blog-post.html#comment-form நட்பு பற்றியது முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் படித்தேன் குடித்தேன். அருமை.தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  3. நட்பு அவசியமே .
    அது நல்லதாக இருப்பது அதனினும் அவசியமே .
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிங்க ஸ்ரவாணி

      Delete
  4. நட்பின் சிறப்பு வரிகள் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்

      Delete
  5. நட்பு பற்றிய சிறந்த கவிதை.

    ReplyDelete
  6. பணத்தால் விலையோ போகாது
    பண்பால் மறக்கக் கூடாத
    மனத்தால் அன்றி நல்லன்பை
    மனிதன் பெறவே முடியாது - உண்மையை உரத்துச் சொல்லிவிட்டீர்கள் கவிஞரே! அருமையான பதிவு வாழ்த்துகள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க முத்துநிலவன் .தாங்கள் பெற்ற இரண்டாம் இடம் சிறுகதைப்போட்டியில் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்

      Delete
  7. நட்பின் பெருந்தக்க யாவுள
    நன்றி ஐயா
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜெயகுமார் அவர்களே

      Delete
  8. நட்பின் வலிமையைச்
    சொன்னவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  9. எதிர்பார்ப்பு இல்லாத எந்த நட்பும் மிக மிக உன்னதமானது! எந்த உறவானாலும் சரி அதில் இந்த நட்பு இருந்தால் அந்த உறவே இனிமைதான்! கணவன் மனைவி உறவானாலும், பெற்றோர் பிள்ளைகள் உறவானாலும் சரி எப்படிப்பட்ட உறவிலும் இந்த நட்புதான் அடிப்படைத் தேவை!! நீங்கள் உண்மையாகவே கவி"யாழி"தான்! யாழ் போல் இனிமையுடன், ஆழி போல் மின்ன வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கு நன்றி.உங்கள விருப்பமே என் சித்தம்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more