எம்மன வேதனை யாரரிவார் ?
திண்ணையில் அமர்ந்த நாளிலன்று
தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ
விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள்
வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார்
மண்ணையே தேடியே மக்களும் செல்ல
மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல
பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே
தன்னையே காக்க தனியே செல்கிறார்
இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ
இளமையை முதுமை இணைந்து கொண்டதோ
துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா
தேடித்தேடி மக்களைக் கொல்வதா
என் மன வேதனை யாரறிவார்
என்னையும் அணைத்திட யார் வருவார்
சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில்
சொர்கமும் தேடியே யார் செல்வார்
கவியாழி.கண்ணதாசன்
26.06.2020
இதுவும் கடந்து போகும்ண்ணே
ReplyDeleteசகோ நலமா ? போகலாம் தொடர்ந்து
Deleteநடையாய் நடப்போரை நினைத்துக் கொள்ளுங்கள்....
ReplyDeleteஉண்மைதான்
Deleteஅனைவருக்கும் சிரமம்...
ReplyDeleteசோதிடமும் சரியில்லை
Deletepainful lines.
ReplyDeleteஎல்லோருமே இதே நிலை
Delete