மறுபிறவி அறிந்தோர் யாரோ?
மறுபிறவி அறிந்தோர் உளரோ மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில் சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ நேர்மையான அன்பும் நாளும் கொண்டு நிகரில்லா நல் பண்புடன் நடந்து ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில் உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு மானுடம்செழிக்க மகத்தான சேவை இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில் இன்பம் பெருகி எளிமையாய் இருப்பீரோ இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம் சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ வானமும் பூமியும் வாழும் உயிர்களும் நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும் சுதந்திரமாய் நடப்பீரோ சொந்தமென -போரில் சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல் கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில் தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில் வாழுங்கள்