Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மறுபிறவி அறிந்தோர் யாரோ?

மறுபிறவி அறிந்தோர் உளரோ மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில் சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ நேர்மையான அன்பும் நாளும் கொண்டு நிகரில்லா நல் பண்புடன் நடந்து ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில் உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு மானுடம்செழிக்க மகத்தான சேவை இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில் இன்பம்  பெருகி எளிமையாய் இருப்பீரோ இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம் சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ வானமும் பூமியும் வாழும் உயிர்களும் நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும் சுதந்திரமாய்  நடப்பீரோ சொந்தமென -போரில் சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல் கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில் தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில்  வாழுங்கள்

கொசுவே நீ செய்வது சரியா

அறிவுள்ள ஆறு நாள் எதிரியே அன்பாக   நீ முத்தமிட்டாலும் அலறுகின்றனர் எல்லோரும் அடிவாங்கி அமரனாகும் -உன்னை அடிக்காமல் விடுவோர் உண்டோ செடி கொடியில் வளர்ந்தாலும் சாக்கடையில் பிறந்தாலும் படைநடுங்கி ஓடுகிறது - பயந்து தொடை நடுங்குது எல்லோருக்கும் எதிரியை  வீழ்த்த  எனக்கு உதவ எழுநாள்  தாண்டியும் வாழ்வாயா ஏவியதும்  உடனே நீ  செய்வாயா-எமனாக காத்திருந்து அவனை கொல்வாயா அதிசய பிறவி நீ அன்பில்லா பகைவன் நீ கத்தியின்றி யுத்தம் செய்யும்-நீ கலிகால புதிரும் நீ உன்னை கொல்ல உலகமே முயலுது உயர்ந்த மருந்து புதிதாய் கிடைக்குது என்ன செய்தும் பயனில்லை  -உன்னால் எனக்கும் கூட வருத்தம் உன்மேலே முப்படையும் தோற்கும் உன் முன்னே முடிவுரை எழுதும் துயரமாய் நின்னே சத்திழந்தோரை \தானே நீ-சாகடிக்கிறாய் சரியா   நீ செய்வது  சரியா

விக்கல்

விக்கல் வருவது எதனால்? விரும்பியவர் நினப்பதாலா? தூக்கம் வருவதாலா? தொண்டையில் பிரச்சனையாலா? இதயம் பேசுதலா ? இல்லை எதனால் ? விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்

நீ பேசாத நாட்களில்

நீ பேசாத நாட்களில் நான் துடித்துகொண்டிரிக்கிறேன் ! உன்னை காண்பதற்கு! நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன் நான் சாவதற்கு ! என்னவென்று சொல்லிவிடு , நிம்மதியாக உயிர் பிரிவதற்கு இன்னும் ஏன் மௌனம் சொல்லிவிடு இதயத்தில் தங்கிவிடு இமைகளை மூடிகொள்கிறேன்

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம் மனமின்றி தவித்தால் மோதலாம் விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால் அபத்தமாய் வேறு சாதிஎன்பர் ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ அருகில் ஏனோ மௌனம் அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும் மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய் சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில் சொந்தமில்லை பந்தமில்லை

பனிக்காலம்

Image
கணவன்   கார்த்திகை மாத பணி கடுமையால்-குளிரில் கணவனை  நோக்கும் இளமையாய் கையிலிருந்த காசை கரியாக்கியதால் -கடனோடு செய்வதரியாமல் சினம் கொள்வார் இம்மாதம் மனைவி கண்விழித்துப்  பார்த்தும்க் கதிரவனை காணாது -நேரம் காலம் கடந்து அதிர்ச்சியாய் ஏழத்தோன்றும் இன்னும் அருகில் இணைந்து படுக்க-இன்முகம் பண்ணும் சேட்டைகள் அதிகம் ஏங்கும் கடவுள் பக்தர் சாத்திரம் படித்து நேர்த்தியாய் திரு-சன்மார்க்கம் போற்றிட சொல்லும் பெருமையாய் ஆத்திரம் அடங்க  அகிலம் போற்ற-கோவில் சத்திரம் செல்வர்  சாமியிடம்  சரணடைவர் காதலர்கள் புது துணியோடு  புறப்படும்  இளசுகள் -சினிமா பல புதிய படம் காண்பர்  இணையாக தனிமையில் தவிக்கும் இளம் சிட்டுகள்-தடுமாறும் இனிமை தேடி இரவையே தவிர்க்கும் சிறுவர்கள்  படிக்க மறுக்கும்  பணியால் உறக்கம்-எழுந்து பாடம் படிக்க குளிரில் நடுங்கும் தேர்வு தொடங்கும் பயம் கொள்ளும்-தேர்வெழுத தினமும்  உண்ண மறுக்கும் பட்டினியாய்

கவியாழி : நீ மனிதனாய் யோசி

கவியாழி : நீ மனிதனாய் யோசி : மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழ...

ரசித்தவர்கள்