தமிழனுக்கு தொடரும் துக்கமடா
சுட்டுவிட துடிக்கின்ற சூரியனுக்கும் வெட்கமில்லை எட்டும் திசையும் சென்றாலும் எங்கெங்கு காணினும் வெட்கமடா-இன்னும் தமிழனுக்கு தொடரும் துக்கமடா உன்னை காணாத உயிரில்லை உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை கள்ளத்தனமாய் செய்கிறான் கண்டபடி கொல்கிறான்- பக்சேவை உனக்கு தெரியாதா இத்தனை நாளாகியும் இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி உன்னத் துடிக்கும்-தமிழர்கள் உன்னையும் வணகுவதாலோ நீயும் அவனும் சேர்ந்து நிம்மதி கெடுக்க நினைக்கும் செயல் சரியா நேர்மை தவறல் முறையா-இன்னும் அவனை ஏன் காக்கிறாய் www.kaviyazhi.com