தீண்டாத இரவுகள்.......
மழையும் அடிக்கடி வருவதால் மனதும் துடிக்குது தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம் விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----