Posts

Showing posts with the label / கவிதை/சமூகம்/மழையே வா

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா மகிழ்ச்சி எமக்குத் தா தா மரங்கள் வளர  செடிகள் வளர மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா பிழையே செய்யா உயிரினமும் பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா பிழையாய் வெட்டிய  மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா புயலாய் சூழ்ந்தும் ஓடிவா புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா பூச்சியும் பறவையும் பறக்கவும் புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா நாட்டு மக்கள் மனங்குளிர வா நல்ல காற்றுமே கிடைக்க நாகரீகம் என்ற பெயரில் நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா கடனே கேட்கா  காற்றை கண்குளிர கொடுக்க  வா காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க கழனிப் பயிர்கள் செழிக்க வா நாட்டு உழவன் மகிழ வா நாளும் உணவு கிடைக்க வா நீயும் உடனே விரைந்து வா நித்தமும் மக்கள்  மகிழ வா (கவியாழி)

ரசித்தவர்கள்