Posts

Showing posts from June, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே இல்லா நிலையில் உள்ளோர்க்கு இதயம் கனிந்தே உதவிடுங்கள் கல்விப் பணியைச் செய்திடுங்கள் கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள் நல்லச் செயலைச் செய்வதற்கு நான்குபேரைத் தத்தெடுங்கள் காசுப் பணமாய் கொடுக்காமல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே பேசும் உலகம் உங்களையே போற்றி மகிழும் நற்செயலை இன்றைய நாளில் தவிப்போரை இயலா நிலையில் உள்ளோராம் அருகில் சென்று கேட்டறிந்து அவரை உயரச் செய்வீரே கல்விப் பணியை முடிந்தவரை கடமையாகச் செய்து வந்தால் எல்லா தெய்வமும் துணைவந்தே ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....

ஏழரைச் சனியின் தாக்கத்தால் ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே காலையில் எழுந்ததும் கடவுளுக்கும் கற்பூரம் காட்டி வணங்குவோரே இறைவன் செயலைக் குறைப்பதற்கே எல்லா கோவிலும் செல்வோரே ஏழை எளியவர் தவிப்பதற்கு இறைவன் காட்டும் வழியென்ன வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ மேலும் கீழும் வருமன்றோ வாழும் முறையுயே என்றிருந்து வந்தத் துயரையும் வென்றிடலாம் உள்ளக் குறையை சரிசெய்தால் உயரும் வழியைக் கண்டிடலாம் நல்லச் செயலை நாள்தோறும் நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம் தெய்வம் தங்கும் கோவிலாக தினமும் மனதை வைத்திருந்து தெரிந்தோர் உயர வழிசெய்தால் தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை அதற்குமே யாருக்கும் கவலையில்லை காலங் கடந்து  திண்பதும் கறியும் கொழுப்பும் உண்பதும் கடையில் கூடி பேசிக்கொண்டே கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம் விற்பனையில் முன்னாக வருவதற்கு வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு எத்தனையோ மருந்துகள்  உள்ளது எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு கற்பனைச்  செய்தாலும் குறையாது கண்டபடியும் சுருக்கவும் முடியாது கைவீசி நடப்போரை கடந்து கனதூரம் செல்லவே  இயலாது பட்டினிப் பசியாய் கிடந்து பழக்குவோம் உடலைக் குறைத்து பாட்டன் பாட்டி உடலைபோல பாதுகாப்போம் உடல் இளைத்து தினமும் காலையில் நடந்தே தண்ணீர் நிறையக் குடித்தே திண்பதில் கொஞ்சம் குறைத்தே திடமாய் வாழலாம் செழித்தே

புனிதக் கல்விப் பணிசெய்விரே....

மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி மக்களின் செயலை முறைப்படுத்தி மானுடம் போற்றி வளப்படுத்தி மனதைக் காப்போம் திடப்படுத்தி நல்லோர்  பலரின் சொல்லையுமே நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே கல்வியில் சிறந்த மாண்பையுமே கற்றதில் நல்லதை போற்றுவோமே இல்லா நிலையில் உள்ளவர்க்கும் இனிதே கல்வியை தொடர்பவருக்கும் பொல்லா பணத்தை கொடுக்காமல் ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள் உயரும் வழியைக் காட்டுங்கள் உழைத்தே சிறக்கும் நல்வழியை உயர்வாய் சொல்லித் தாருங்கள் இளையோர் இன்றும் நேர்மையதை இனிதாய் போற்றி வாழ்கின்றனர் துணையாய் படித்த கல்வியது தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ

திரண்டக் கனியைக் கசக்கினாலே...

இயற்கை அன்னைப் படைப்பிலே எத்தனையோ அற்புதங்கள் இருக்கு எண்ணற்ற உயிரினங்கள் பிழைக்க ஏரிக்குளங்கள் மலைகள் மரங்கள் அதற்கும் உயிருண்டு மகிழ்வுண்டாம் அன்னையைப் போல் சீராட்டி கற்பனைக் கெட்டா முறையில் கருவாகி உருவாகி மலருமாம் பூவும் பிஞ்சாகிக் கனியாகுமாம் புயல் காற்றையும்  தாங்குமாம் நெஞ்சம் மகிழத் தாலாட்டி கொஞ்சி வளர்த்தே மகிழுமாம் பச்சை நிறத்தில் தொங்குமாம் பார்ப்பவர் கண்ணும் கெஞ்சுமாம் பக்கம் செல்லப் பார்த்தாலே பயந்துச் சிரித்தே ஆடுமாம் மஞ்சள் நிறமாய் மாறுமாம் மனதைக் கொள்ளை யாக்குமாம் பிஞ்சு முகத்தில்  காணுமாம் பெண்ணாய் வயதைத் தீண்டுமாம் திரண்டக் கனியைக் கசக்கினாலே தீண்டும் சுவையோ அதிகமாம் மீண்டும் மீண்டும் வேண்டுமாம் மிகுந்து விளைவது சேலமாம் புரிந்ததா...? தெரிந்ததா...? இனித்ததா...?

இயற்கையின் மகிழ்ச்சியால் இன்னலே அதிகமோ ?

Image
                                       இயற்க்கையின் மகிழ்ச்சியால் இன்னலேஅதிகமோ இறந்திடும் உயிர்களே இதற்குத் தான்  சாட்சியா இடியும் மின்னலும் யாருக்காய் வந்தது இழப்பினால் மகிழ்ச்சியும் யாரிடம் சென்றது பிழைப்பே சோகமாய் பிரிவுடன்  சென்றது பெருவெள்ளம் பக்தரை பினையாக்கிச் சென்றது உயிர்களைக் காக்கும் உயிரில்லாக் கடவுளும் ஓடி ஒளிந்ததா ஒய்வாக நின்றதா? கிடைத்த வாய்ப்பினால் குறைத்துக் கொண்டதா?

விட்டுப் போன உறவு

விட்டுப்போன உறவும் வேதனைகள் சிலதும் பட்டுபோயும் நாளாச்சு பார்த்துத் தூரப்போயாச்சு கட்டுகடங்கா அன்பில் கடைசிவரை இருக்க காத்திருந்த நட்பும் காலங்கடந்துப் போயாச்சு தொட்டுப் பேசி மகிழ்ந்து துன்பம் மறந்து சிரித்தோம் கட்டுக்கதைப் பலதால் கவலையிப்போ வந்தாச்சு கெட்டுப் போன மனதை திட்டிப்பேசிக் கேட்க தைரியம் தூரப் போயாச்சு தவிப்பு கொண்டே நின்னாச்சு தட்டுப் பட்டு மீண்டும்  தலை குனிந்தே வேண்டி புட்டுப் பார்க்கச் சொல்லி புரியாம மின்று தவிச்சாச்சு

மகளிர் அணியில் மஞ்சுபாஷினி....!!

Image
இனமோ மொழியோ தடுக்காமல் இணைந்தே மகிழ்ந்தோம் வலையாலே பணமோ பொருளோ தேவையின்றி பாசம் கொண்டே இருந்தோமே இளைய வரோடு இணையாக இனிதே சிரித்தோம் சுவையாக அய்யா முகத்தில் பிரகாசம். ஆயிரம் சக்தியைக் கண்டோமே சேட்டைச் சொன்ன சிரிப்பையுமே சேர்ந்தே சிரித்துப்  பார்த்தோமே பழகிய நேரம் குறைந்தாலும் பசுமை மறந்தேப் போகாதே மகளிர் அணியில் மஞ்சுபாஷினியும் மகிழ்ந்தே வந்த சசிகலாவும் மதுமதி கணேசும் கோவைஆவியும் சீனி ரூபக்கும் மாணவரும் அத்தனைப் பேரும் அன்பாக அடிமை கொண்டோம் நட்பாலே சிரித்தே மகிழ்ந்த அந்நேரம் சிறைகை விரித்தே பறந்தோமே எத்தனை வலிமை நட்புக்கு யாரிடம் முடியும் வீராப்பு பித்தமாய் இணைந்த  நட்பாலே பிரிவும் வருமே அதனாலே அன்பாய் பழகிப் பாருங்கள் அடிமைச் சுகத்தைக் காணுங்கள் பண்பாய் சேர்ந்து பழகியே பாசத்தோடு மகிழ்ந்தே வாழுங்கள்

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே நாங்கள் வளர்க்க விரும்புகிறோம் நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி நண்பராய் நினைத்தே பழகுகிறோம் வல்லவர் வறியவர் சொல்லாமல் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம் இல்லையே என்பதைஉணர்த்தாமல் இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம் முதியவர் இளையவர் பகிர்வின்றி முறையே நட்பாய் மதித்திடுவோம் ஆடவர் பெண்டீர் அனைவருமே அன்பாய் மதித்தே நடந்திடுவோம் நல்லவவை கெட்டவை நடப்பதையே நாலே வரிகளில் எழுதிடுவோம் நன்மையும் தீமையும் நோக்காமல் நலமே போற்றியே பதிவிடுவோம்  இன்னல் துயரம் நடப்புகளை இணைய வலையில் பகிர்ந்திடுவோம் எல்லா ஊரிலும் எம்தமிழை இணையம் கொண்டே வளர்த்திடுவோம் சாதி மதங்களை மறந்திடுவோம் சமத்துவம் நன்றே போற்றிடுவோம் ஊரும் பேரும் தெரியாமல் உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம் இல்லம் இனமே பாராமல் இணைய வழியே பேசிடுவோம் வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..

எப்போதும் எந்நாளும் குடும்பமே என்றிருந்த என் அப்பாவுக்கு இப்போது நன்றி சொல்வேன் இதற்காகத் தலை குனிவேன் மழலையிலே மடியில் கிடத்தி மாறாத அன்பு கொண்டு பணிவிடைகள் பலதும் செய்து பாங்குற வளர்த்தத் தந்தையே தப்பேதும் நான் செய்தால் தவறையே சுட்டிக் காட்டி முப்போதும் அறிவுரைச் சொல்லி முறையாக என்னை வளர்த்தாய் தேவையறிந்து தேடித் தந்தாய் தெவிட்டாத இன்பம் தந்தாய் பூவையிணை மணம் முடித்து புதிய வாழ்கையும்  அமைத்தாய் பொருள் சேர்க்கும் வழிமுறையும் பெரியோரின் மன நோக்கம் புரியும்படி சொல்லி வளர்த்தாய் புனிதனாய் என்னை பார்த்தாய் நாள்முழுதும்  உழைத்தாய் நான் வளரப் பாடுபட்டு நல்வாழ்வை எனக்கு தந்த தோள் கொடுத்த தெய்வமே வணங்குவேன் உன்னை எப்போதும் வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன் கனமும் உன்னை மறவேன் கடமையும் உம்போலச் செய்வேன்

கூட்டங் கூடிக் குடிப்பது

நாளும் கிழமையில் நட்புக்காய் நல்லோர் சிலரின் முன்னிலையில் நற்சுவைக் கலந்தே குடித்தனர் நாகரீகமாய் அங்கேயே மகிழ்ந்தனர் ஆளும் வர்க்க அரசனுடன் அடித்தட்டு மக்களும் கூட்டமாய் அன்றும் சேர்ந்தே சுவைத்தனர் அப்போதே கலைந்து சென்றனர் இன்று எல்லாமே மாறியது எல்லோரும் சேர்ந்து ஆடுவது கல்லாதோர் இல்லாதோர் கூடிக் களியாட்டம் எங்கும் போடுவது எல்லா மக்களுமே சீரழிய எங்கும் கடைகள் திறப்பது கோயில் பள்ளி  அருகிலும் கூட்டம் கூடிக் குடிப்பது இதிலே சமத்துவம் இருப்பதாய் இணைந்தே மகிழ்ந்து குடிப்பனர் இளையவர் முதியவர் மறந்தே இனிமை வேண்டி துடிப்பனர் தினமும் தொடர்ந்தே குடியை  தைரியம் கொண்டே குடித்ததால் தலைக்குப் போதை ஏறவே தரையில் வீழ்ந்தே கிடந்தனர் பணமும் புகழும் அழியவே பாடாய்படுத்தும் இக்குடியை மனமே  திருந்தி நிறுத்தினால் மகிழ்வதும் உந்தன் குடும்பமன்றோ

காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதோ எண்ணியதை எழுதியதை மறக்காமல் இப்போது எழுதுகிறேன் இளமையின்றி  ஏங்குகிறேன் வாழ்க்கை ஓட்டத்திலே வெற்றிபெற ஓடிக் கொண்டே வாய்த்த வாய்ப்புகளை வழிதவறி விட்டுவிட்டேன் அப்போது எண்ணவில்லை அதற்குமே நேரமில்லை அந்தகாலமும் முடிந்ததால் அதற்குமே வேலையில்லை தப்பாக நினைப்போரே தரமறிந்துப் பார்ப்போரே முப்போதும் காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன் எப்போதும் மகிழ்ச்சியாய் எண்ணமதை வைத்திருக்க தற்போதே எழுதுகிறேன் தவறிருந்தால் மன்னிப்பீரே கண்குளிரப் படித்திடவும் கவிஎழுதி முடித்திடவும் காதலிக்கத் தமிழுண்டு காலமெல்லாம் மகிழ்வுண்டு

மேகத்தின் சேதியது...

Image
மேகத்தின் சேதியது மேனியிலே பட்டவுடன் தாகமெடுக்கிறதோ தனிமை தவிக்கிறதோ? பூவெல்லாம் பேசியதும் புல்செடியும் கேட்டவுடன் பூவைக்கு இனிக்கிறதோ பூவைக்கத் துடிக்கிறதோ? வழியெங்கும் பசுமரங்கள் வாழ்த்தாக தூவியே பூமழை பொழிகிறதோ புதுப்பாதைத் தெரிகிறதோ பச்சைக்கிளியும் புறாவும் பக்கமாய்  நெருங்கியே இச்சைச் செய்வது இம்சையாய் இருக்கிறதோ? இளம்மனது கருகியதால் இன்பத்தை இழந்துவிட்டு இப்போது ஏக்கத்தையே இனிமையாக்க மறுப்பதோ? தவறென்ன வாழ்கையில் தைரியமாய் செய்யுங்கள் உறவங்கே மறுத்தாலும் உரிமையாய் தொடருங்கள் வாழ்கையை தீர்மானிக்க வயதுண்டு அறிந்துகொள் வாழ்கையே உன்கைளில் வாழ்வுமுந்தன் உரிமையே

கடவுளை நானும் கண்டதுண்டு..

கடவுளை நானும் கண்டதுண்டு கண்டு நன்றி சொன்னதுண்டு கண் கலங்கி பார்த்ததுமே கடவுளே மயங்கி நின்றதுண்டு பழகியே நான் மகிழ்வதுண்டு பாசமோடு அன்பு கொண்டு பார்க்கும் போது பரவசமாய் பக்தியோடு அமைதி கொண்டு மன மொடிந்த நேரத்திலே மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு நாலு வார்த்தை  மகிழ்ச்சியாக. நானுயர நன்று கேட்டதுண்டு கள்ளமில்லா  நட்பை நானே கடவுளாகப் பார்த்த துண்டு கடைசியிலே சிலர் மறந்து கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு உடலதிலே உள்கூட்டில் ஒளிந்திருக்கும் தசையதுவே உண்மை அன்பு நேர்மையாக்கும் ஒளி மிகுந்த கடவுளாக்கும் உள்ளபடி சொல்லப் போனால் உருவ முள்ள கடவுளில்லை உள்ளோரின் நல்ல அன்பே உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

உத்தமியே நற்சுவையே ...

தூக்கத்திலே தொல்லைத் தரும் தூரதேசப் பேரழகித் தமிழே ஏக்கத்திலே  எப்பொழுதும் நீ என்னை ஏன் இம்சிக்கிறாய் ஆக்கத்திலே உன் பெயரை அனுதினமும் உச்சரித்து ஆனந்த பாடுகிறேன் உன்னை ஆண்டவ நெனனான் போற்றுகிறேன் பாக்களிலும் பரவசம் தந்தாய் பார்த்தவுடன் நவரசமும் ஈந்தாய் ஈரெழுத்து மூவெழுத்து சீருடன் எழுத வைத்தாய் சிரித்தாய் சீர்கொடுத்துச் செம்மைப் படுத்தி சின்னஞ்சிறுப்  பிழையும் பொறுத்து எதுகை மோனையுடன் என்னை எழுதத் தூண்டியே  மகிழ்கிறாய் என்னை ஆட்கொண்டத் தமிழே எண்ணமதில் சிறைபிடித்த அமுதே உன்னை எப்படி மறப்பேன் உத்தமியே நற்சுவையே இனியே..

தினமும் பார்த்தேச் சிரித்திடுமாம்

ஒவ்வொரு உயிருக்கும் உணர்ச்சியுண்டு உண்மையில் அதற்குமே வருத்தமுண்டு பூவும் பிஞ்சும் உதிர்வதனால் பெற்றவள் மரத்துக்கும் செடிக்கும் பிரிவுண்டு பொல்லா நோயும் வரும்போதும் பொழுதும் தலையைச் சாய்த்திடுமே எல்லா உயிரும் மரணத்திலே ஏக்கம் கொண்டே மடிந்திடுமே இடியும் மழையும் வரும்வேளை மனதில்  மகிழ்ந்தே இருந்திடுமே இயற்கை சீற்றம் வரும்போது எளிதில் பயந்தே சரிந்திடுமாம் நீரைச் சுவைத்தே வாழ்த்திடுமாம் நிம்மதி கொண்டேப்  பாடிடுமாம் தேரைப் பாம்பு பூச்சிகளை தினமும் பார்த்தே சிரித்திடுமாம் இயற்கைப் பொய்த்துப் போனாலே எல்லா உயிரும் கலங்கிடுமாம் எப்படி மனித வாழ்க்கையோ  அதற்கும் அப்படி உயிருண்டாம்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து

மேனியெல்லாம் நகையைப் பூட்டி மேல்சாதி என்று சொல்லுவான் மீதுமுள்ள உடல் இடங்களுக்கு மேலும் சாந்தும் பூசுவான் கீழ்த்தட்டில் வாழும்  மக்களையே கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான் கீழிருந்து மேல்வரைப் உற்றுக் கெட்ட வார்த்தைக் கூறுவான் கலர்க்கலராய் ஆடைப் பார்த்து கண் சிவந்து கொள்ளுவான் கண்டபடி மனதில் எண்ணி கஷ்டகாலமென்று  சொல்லுவான் நாட்டுக்கு உழைக்கச் சொல்லி நடித்தும்  நாடக மாடுவான் நாறிப் போன மானத்துக்கு நன்கொடைகள் பல செய்யுவான் கோடிகோடிப் பணத்தை சேர்த்து காவல் காத்து நில்லுவான் கஷ்டப்படும் ஏழைக்கு காசை வட்டிபோட்டு வாங்குவான் கண்டபடி மாத்திரையை மூன்று வேலை தின்னுவான் கடைசியிலும் உடலை வருத்தி கஷ்டமாக உயிரை நீக்குவான்

அவளின்றி எனக்கே மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது

அதிகாலைச் சூரியனே..

Image
அதிகாலைச் சூரியனே அன்பான வரவேற்பு ஆண்டவனைத் தரிசிக்க ஆர்வமுடன் வருகிறாயோ இன்முகத்தில் நீ வந்து இன்னல் தீர வேண்டுகிறாய் ஈசனையும் பார்த்துவிட்டு ஈகையோடு வாழ்த்துகிறாய் என்ன தேடி வருகின்றாய் எதற்காக  நீ கோபமுற்றாய் ஏனிந்த தீக் கனலை ஏற்றிவிட்டு தாக்குகிறாய் ஐயமில்லை உன் கோபம் ஐவருள் நீ அடக்கம்தானே ஒற்றுமையாய்  பஞ்சபூதம் ஒன்றி நன்மை செய்தாலே ஓங்கி வரும் நல்லொழுக்கம் ஒவ்வொருவரும் பேணுவார்கள் அஃதே எல்லோருக்கும் நலமாம்

மகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு

Image
     இன்று 05.06.2013  மாலை 5.00 மணிக்கு புலவர் ஐயாவையும் மற்றும் பிற நண்பர்களையும் காண வந்திருந்த அருமைச் சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்கள் புலவரைய்யா வீட்டிற்க்கு வந்திருந்தார்.அய்யாவின் அவர்களின் விருப்பப்படி நாங்கள் அய்யா வீட்டிற்கு சென்றிருந்தோம். எல்லோரையும் அய்யாவின் இளையமகள் சித்ரா அவர்கள் உபசரித்து வரவேற்றார். அதன்பின் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் படத்தில் முதலில் நான். புலவர்.ரமாநுசம் அய்யா.பாலகணேஷ்,மதுமதி.இபான்.சசிகலா சங்கர் மஞ்சுபாஷினி நான்(கவியாழி),(மின்னல் வரிகள் )பாலகணேஷ்,புலவர் அய்யா, (தென்றல் )சசிகலா,(கதம்ப உணர்வுகள்.)மஞ்சுபாஷினி,மதுமதி புலவர் அய்யாவுடன் சசிகலாவும்,மஞ்சுபாஷினியும் மகிழ்ச்சியுடன். தனியாக எடுத்துக் கொண்ட  புகைப்படம்.   ஏறக்குறைய இரண்டு மணி நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துச் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தது நிச்சயம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியாய் இருந்தது. மறக்க முடியாத நிமிடங்கள் மகிழ்ச்சியான தருணங்கள்

ஆனந்த வாழ்வை பிரியோம்

உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் உருமாறும் காலங்கள் நேரங்கள் உண்மையை புரிந்ததா மனிதம் உலகமே அறியாத புதிராம் பொய்த்துப் போன இயற்கை புரியாத காலநிலை மாற்றம் சொல்லிலே பேசும் செயற்கை சோகமாய் மாறிவிட்ட நேர்மை வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர் சொல்லிலே விஷத்தை சேர்த்தவர் நல்லதை நாளும் செய்பவர் நாணயமே இல்லாத மனிதர் வாழ்கையில் ஏமாற்றம் வரும் வந்தபின் பணிந்து செல்லும் வசந்தமும் வந்து வாழ்த்தும் வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும் இன்னும் உள்ளது மனிதம் எப்படியும் மாறிவிடும் உலகம் அப்படியே சுழற்சி நின்றிடாது ஆழ்கடலும் வற்றிடாது அறியோம் அன்பினை யாருமே மறுத்து அறமே செய்வாரே பொறுத்து நீதியும் நேர்மையும் செயிக்கும் நித்தமும் மகிழ்ச்சியே பெருகும் ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம் ஆனந்த வாழ்வை பிரியோம் இருக்கும் வரையே நமது இறந்த பின்பு யாரறிவார்

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more