Posts

Showing posts from April, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

உணர்வில் தமிழன் என்றிருந்தால்........

தமிழைப் போற்றி வந்தவர்கள் தனியாய் பிரிந்தக் காரணமேன் மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள் மோதிக் கொல்லும் நிலையெதனால் உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள் உடனே விலகிப் போனதுமேன் பகையைச் சேர்த்து எப்பொழுதும் பண்பை மறந்து வாழ்வதுமேன் சாதியும் மதமும் எப்பொழுதும் சண்டை வந்திடக் காரணமேன் மோதிக் கொண்டு இருப்பதற்கு முடிவைக் காணா போவதுமேன் தம்மை பிரித்த துரோகிகளின் தரத்தை அறிய வேண்டாமா உண்மை நிலையை உணராமல் உயிரைப் போக்க வேண்டுமா ஒற்றுமையோடு நாம் இருந்தால் உணர்வில் தமிழன் என்றிருந்தால் கற்றவர் சொல்லை கேட்டறிந்தால் சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்

மகிழ்வாய் நானும் வணங்குகிறேன்

கடந்தன நாட்கள் -200 கண்ட பதிவுகள்- 200 பார்த்தவர் பார்வைகள்- 20,000 மகிழ்ச்சியாக உள்ளது மனமெழுதச் சொன்னது நெகிழ்சியான தொடக்கமே- 200 நாட்களை தாண்டியது மெய்யாய் கொடுத்த முடிந்தோர் ஆதரவில் அடியேன் முடித்தேன்- 200 அடங்கும் பதிவுகள் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை பெருமையாக எண்ணவில்லை உருக்கமான பயணத்தில்- 20000 உண்ர்வுடன் வந்தனரே தொடர்ந்து வந்து துணைபுரிந்த தோழர்களை கிடந்தே நானும்- நன்றியுடன் மகிழ்ந்து வணங்குகிறேன் எனக்கு ஊக்கம் கொடுத்து "அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும் தருவாயா" என்றமுதல் புத்தகத்தை வெளியிட முன்னுரை எழுதித் தந்துஎன்னை உற்சாகப் படுத்திய மரியாதைக்குரிய புலவர்.ராமாநுசம் அய்யா ,திருவாளர்.எஸ்.ரமணி திருவாளர்.பாலகணேஷ் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.மேலும் எனக்கு பிளாக்கைதொடங்கி கொடுத்த திருமதி.சசிகலா சங்கர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.எனக்கு எப்போதும் அன்போடு என்னை வழிநடத்திய நண்பர்கள் மதுமதி,திண்டுக்கல்.தனபாலன்,பட்டிக்காட்டான் ஜெய், கூகுள்,தமிழ்மணம்,வலைச்சரம் குழு,தமிழ்10,இன்ட்லி,முரளிதரன்,மற்றும் உடன் வந்து ஊக்கப்படுத்திய இ

சின்னஞ் சிறு விதைகள்-5

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு வேதனையால் வீறி அழுததுண்டு-எதிரி வீசும் பார்வையைக் கண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை

தற்கொலையால் மடிந்து விடாதே

ஆத்திரத்தில் அறிவிழந்து தவறிழைக்காதே அடிக்கடியே அதைநினைத்து குறுகிவிடாதே நீண்டநெடு நேரமுண்டு மறந்துவிடாதே-எதிரில் நேரமுனக்கு காத்திருக்கு வருத்தப்படாதே தோல்வியாலே துயரமென்று துவண்டுவிடாதே தொடர்ந்துவரும் கடமையை நீ மறந்துவிடாதே மாந்தருண்டு மனிதமுண்டு மறந்துவிடாதே-மனதை மாற்றி தற்கொலையால் மடிந்துவிடாதே காலமுண்டு வாழ்க்கையுண்டு கலங்கிவிடாதே காத்திருக்கு வெற்றியதை தவிர்த்துவிடாதே அனைவருக்கும் நிகழ்வதைத் தெரிந்துகொண்டு-அன்பு அத்தனையும் மறந்துவிடும் வெற்றிகொண்டு வெற்றித் தோல்வி வருவதுண்டு வீரமென்று வெகுசிலரே பார்பதுண்டு தொற்றுக் கொண்டு தொடர்வதுண்டு-வாழ்வில் தோல்விப் பிறகு வெற்றியாவதுமுண்டு கற்றவர் பலபேர் சொல்வதுண்டு கற்பனையாய் சிலதும் நிகழ்ந்ததுண்டு வெற்றியே வரலாறு படைத்ததுண்டு-நல்ல விடையதிலே கிடைத்திடுமே இனிமைகொண்டு

தினமும் பலபேர் மடிவதற்கு......

தினமும் பலபேர் மடிவதற்கு பணமும் பகையும் காரணமா குணமே இல்லா கோழையர்கள் கொடுக்கும் தொல்லையின் வேதனையா மனதும் வருந்த வேண்டுமா மனிதமும் மறக்கத் தோனுமா மக்கள் பலபேர் மடிவதினால் மனிதனின் துயரேத் தீர்திடுமா மனிதம் மறந்து போவோரே மக்கள் கவலை மறந்தோரே பணமே குறியாய் வாழ்வோரே பணத்தை உணவாய் உண்பீரோ மதமும் எங்கும் சொல்வதில்லை மனதில் கவலை வளர்ப்பதற்கு மக்களின் குறையை நீக்கிடவே மாற்று வழிதான் இருக்கிறதே கவலை மனதில் மறைவதற்கு கணிதம் சொல்லும் விடையென்ன அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும் அதற்கும் தீர்வு இருக்கிறதோ தற்கொலை செய்யும் இழிந்தோரே நற்செயல் இதுவென யாருரைத்தார் தற்கொலை தண்டனை யாருக்கு நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு

நான் புலமை அறிந்தப் புலவனில்லை

இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை இலக்கியம் நாளும் படிப்பது மில்லை வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ் வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே புலமை அறிந்த புலவனு மில்லை பொழுதும் எழுதும் கவிங்ஞனு மில்லை அனைத்தும் தெரிந்த அறிங்ஞனு மில்லை-வழக்கில் அறிந்ததை கொண்டேஎழுதுவதென் நெல்லை முனைவராய் நானே படித்தது மில்லை முறையே தமிழைக் கற்றது மில்லை பிழையாய்க் கருத்தைச் சொல்வதுமில்லை-இதையே பிழைப்பாய்க் கொண்டு வாழ்வது மில்லை பணியால் முடங்கி போகும் போதும் பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும் துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே அறிந்தோர் என்னை அறியச் செய்வீர் அதையும் நன்கு திருந்தச் சொல்வீர் புரிந்தோர் நிலையை புரிந்து கொண்டு-கவிதை புனையத் தொடர்ந்து புகழைத் தாரீர்

குறையே பேசும் நண்பர்களே

குறையே பேசும் நண்பர்களே குறைத்தே மனதில் காயங்களை மறைந்துப் போகா வார்த்தைகளை மறுபடி மடிந்து பேசுவதேன் நிறைகளை நீங்கள் பேசினால் நியாயமாக முதுகில் தட்டினால் பறந்தே போகும் வலியெல்லாம் பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாய் தவறே அவரும் செய்தாலும் தனையே மறந்து புரிந்தாலும் உறவை வளர்க்க உறுதுணையாய் உள்ளதைச் சொல்லி திருத்தலாமே உலகில் பலபேர் இருந்தாலும் உணர்த்த முடியா காரணத்தால் பகையே அதனால் உண்டாகி பலரும் வருந்தும் நிலைவேண்டா ஒற்றுமை கொண்டு வாழ்வதினால் உயர்வே நிறைய பெற்றிடலாம் கற்றவர் இதனை கண்டுரைத்து கண்டவர் திருந்த வாய்ப்பளிப்போமே

முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்

அப்பனுக் கிணையாக உலகில் ஆயிரம்த் தெய்வமும் உண்டோ ஆண்டவன் என்று சொன்னால்-முதலில் அப்பனையே நாளும் தொழுவேன் கற்பனைக் கெட்டாத கனவுகளுடன் கைபிடித்து நடக்கச் செய்து கண்விழித்துக் கதைசொல்லி-தினமும் கருத்துக்கள் ஆயிரம் சொல்வார் வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார் போர்கலம் தான் வாழ்க்கையென-தினம் புலர்ந்ததும் சொல்லி வைத்தார் ஏற்பதும் படிப்பதும்  வாழ்க்கையென எப்போதும் சொல்லியே வளர்த்தார் எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை எடுத்துரைத்தே  படிக்க வைத்தார் சொல்லாத வார்த்தையை செய்கையில் செய்துகாட்டி புரிய வைத்தார் இல்லாமை இல்லையென-திறமை இருப்பதை  காட்டி வளர்த்தார் அறிவையும் அன்பையும் வளர்த்து ஆணவம் என்பதை வெறுத்து துணிவையும்  தூய்மையும் கொடுத்து-மனதில் துணையாக எப்போதும் இருந்திடுவார் ஆயிரம் வார்த்தையில் அடங்காது ஆணவம் எப்போதும் தோன்றாது அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள் அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்

விதியை மாற்றும் சாலைவிதி

தலைகவசம் அணியாதோர் தாங்கலாய் தேடிக்கொள்ளும் தலைவிதியே மரணம்              ----------- சாலைவிதியை மதிக்காமல் செல்லுகின்ற அன்பர்களே ஓலையின்றி  தேடிவரும் உத்தரவு மரணமே                 -------- விதிமறந்து  வேகமாய் வீதியில் சென்றால் மதிமயங்கும் இறுதியில் மரணமே கொடுக்கும்               --------- துர்மரணத்தை தேடியே தூங்கிக் கொண்டே தூரமாய் வேகமாய் வாகனம் செல்லும்             ----------- வீட்டிற்கு செல்லவே வாகனம் வேண்டும் விதிமாறி சுடுகாட்டிற்கு ஓட்டிச் செல்லாதே               ----------- குடும்பத்தை நினைத்து வாகனம் செலுத்து கூடிய மட்டும் வேகத்தைக் குறைத்து                --------- போதையில் வாகனம் போய்சேரும் இடமோ மருத்துவ மனை வளாகம்              ----------- விதியை வெல்ல வேகமாய் ஓட்டும் புரியாத நிமிடத்தில் பேராபத்து காத்திருக்கும்                ------------ இருசக்கர வாகனத்தை முறுக்கினால் இன்பமாம் இடையில் சறுக்கினால் இறுதியில் துன்பமாம்             ------------ விதியை மாற்றும் வேதனையை சேர்க்கும் மதிமயங்கி வேகமாய் மரணத்தை தழுவும்            ======

மனிதம் போற்றி வாழுங்களேன்.....

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

மழலையின் சிரிப்பு மத்தாப்பு

மத்தாப்பு பூத்ததுபோல் மழலையின் சிரிப்புதனை தப்பாக பேசமுடியுமா தவறாக சொல்லலாகுமா கத்தாளை உடம்புபோல காட்சியாக இருந்தாலும் கருப்பாக வழுக்கையாய் தூங்குமூஞ்சி ஆனாலும் சிட்டாக தாவிவரும் சிறுநீரை கழித்தாலும் மொட்டான மலர்களை திட்டத்தான் இயலுமா பூவைத்து பொட்டிட்டு புதுசட்டையும் போடாமல் புன்சிரிப்பாய் ஓடிவரும் பிள்ளைகளை பார்த்ததும் தொல்லைகளை மறந்து தோளில் சுமத்தியதும் மனதில் மகிழ்ச்சியை-யாரும் மறைக்கத்தான் முடியுமா

காரணம் நிச்சயம் பணமாமே

பாட்டிச் சமையலை புசித்தீரா பாட்டன் கதையை கேட்டீரா பணமும் அதிகம் செலவில்லை-உறவு பண்பே குறைந்தும் போவதில்லை அங்கும் இங்கும் அலைவதனால் அறமே மறந்து வாழ்வதினால் பண்பும் கெட்டு வாழ்கிறார்-இதையே படித்தவர் தானே செய்கின்றார் கற்பனையான வாழ்க்கைதனை காணத்தானே  தவறு செய்யும் சிற்சில மக்களின் தவறுகளால்-மகிழ்ச்சி சிதறிடும் வாழ்க்கை நியாயமா தேடி எங்கும் செல்லாமல் தெய்வம் வந்து சொல்லாமல் கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை கோடிப் புண்ணியம் கூடுமே பெற்றோர் துணையும் இல்லாமல் பிறிதொரு வாழ்க்கைத் தனியாக கற்பனை கொண்டவாழ்க்கைக்கு-உண்மைக் காரணம் நிச்சயம் பணமாமே

மீண்டும் சென்னைக்கே வந்துட்டேன்

அன்பான வலைத்தள நண்பர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் மூன்று வருடத்திற்கு மேலாக- பணிக்கு முடியாமல் தினமும் பயணமானேன் நீண்ட காலம் சென்றபின்னும் நேரம் கடந்து அங்கிருந்தேன் பகையான நட்புக்களால் தினமும் பரிதவித்துக் கண் கலங்கினேன் தாண்ட முடியா சிரமங்களும்-மனதில் தன்னிடமே கொண்டு வாழ்ந்தேன் தகையோரின் பெரியோரின் ஆசியாலே துயரமெல்லாம் தாங்கி நின்றேன் தயவாக வேண்டியே விண்ணப்பித்து தடம்மாறி மீண்டும் வந்திட்டேன் உயர்வான எண்ணத்துடன் -இங்கே ஊழியத்தை நன்றே செய்திடவே பகைமாறி பாசமும் நேசமும் பண்பாடும் நாகரீகம் போற்றியே நெடுநாளாய் நானும் காத்திருந்து -மகிழ்ச்சியாய் மீண்டும் சென்னைக்கே வந்திட்டேன்

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....

போரின்றி ஈழம் கிடைக்காதோ

ஒற்றுமையாய் தமிழர்கள் இருப்பாரோ ஓரணியில் சேர்ந்து உழைப்பாரோ போரின்றி ஈழம் கிடைக்காதோ-ஐநா புகுந்து வாக்கெடுப்பு நிகழ்த்தாதோ பார்போற்ற மகிழ்ச்சித் திரும்பாதோ பைந்தமிழன் வாழ்வும் சிறக்காதோ பூவுலகில் தமிழன் புகழ் இருக்க-புதிய விஞ்ஞான நிகழ்வும் நடக்காதோ விஜய வருடத்தில் விடிவும் விடுதலைக்கான தூய தெளிவும் வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ அயல்நாட்டில் வாழும் அனைவரும் அப்பா அம்மா கூட்டுக்குடும்பமாய் எப்போ ஒன்றாய் மகிழ்ந்து-இன்பம் தப்பா வாழ்வு மீண்டும் கிடைக்குமா சிண்டு சிறுசும் ஓடியாடி விளையாடி கெண்டு கிழங்கள் பேசி மகிழ்ந்து திண்டு திண்ணை சுற்றம் கூடி-இன்பம் கண்டு மகிழும் நாளும் வாராதோ

சித்திரையே வருக

Image
சித்தரை மாதமே சீக்கிரம் வா சிந்தனை அதிகம் எனக்குத் தா நித்திரை கெட்டுப்போவதாலே-கவிதை நிறைய எழுத நிம்மதித் தா அதிக மழைபொழியும் ஆடியில் அன்பாக இருந்து உருவாகி அறிவாக பிறந்த நீ-அன்பால் அடிமையாக்க அசைந்து நீ வா தவறாக சொல்வோர் இருப்பார் தை மாதம் பிறப்பு என்பார் மைகொண்ட உன் விழியால்-எம்மை மகிழ்ச்சி கொடுக்க நீ வா கோடை வெயில் கொளுத்தினாலும் குறைச் சொல்லி யுன்னை மறுக்காமல் முக்கனியும் சக்கரையும் வைத்து-உன்னை முழுமனதோடு வரவேற்கிறேன் நீ வா இன்னலைத் தீர்க்க இன்று வா ஈழத்தில் அமைதி நிலவ வா இனிமையான சித்திரையே வா-தமிழர் இன்னலைத் தீர்க்க ஓடி வா மழையோடு சேர்ந்து நீ வா மகிழ்ச்சியாய் பொழிந்து நீ வா மக்களின் துயர் நீக்க வா மனிதநேயம் காக்க மீண்டும் வா

தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

எட்டுமாத கர்பிணிபோல் எப்போதும் முந்தி நிற்கும் கட்டுடம்பு மாறியே காட்சிதரும் காற்றடைத்த வயிற்றினாலே குனிந்து நின்று பாராது கூணுடம்பு உள்ளோர்க்கு ஏனிந்த வேதனை-எல்லாமே உணவால் வந்த சோதனை இளையோருமின்று இப்படித்தான் எழில் துறந்து காணுகிறார் தொழிலாகப் பலபேர்-அதை துணையாக கொண்டுள்ளார் எத்துணைப் பயிற்சிகள் எப்போதும் செய்தாலும் அழகைக் கெடுக்க -விரைந்து ஆர்வமாய் முந்துகிறாய் தொந்திகணபதியை துதித்து தேங்காய் உடைக்கிறார்கள் தேடிபோய் சிரித்து நின்றால்-என் தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் அடுத்தவர் பார்த்தாலும் அதைப்பற்றிக் கவலையின்றி கொடுக்கின்ற சத்ததால்- உன்னை அசிங்கமாய் பார்க்கிறார்கள்

பாட்டன் பாட்டியை மறக்காதே

சின்னச் சின்ன பிள்ளைகளே சிரிப்புக் காட்டும் குழந்தைகளே எண்ணம் முழுதும் அப்படியே-அழகால் எடுத்துக் கொள்ளும் செல்வங்களே அன்னம் தவழ்ந்து வரும் அழகு கொண்ட நடையும் கன்னம் குழிவிழ சிரிப்பதையே-நான் கண்டே உள்ளம் மகிழ்கிறதே உண்ணச் சொன்னால் மறுத்தே ஓடும் அழகை பார்பதினால் எண்ணத் தோணுது உன்னோடு-எனக்கும் எகிறிக் குதித்து விளையாட சொன்னச் சொல்லை மீண்டுமே சொல்லிச் சொல்லி வருகின்றேன் இன்னும் புரியா பிள்ளையாக-அழகாய் இதையே மீண்டும் கேட்கிறாயே பள்ளிச் செல்ல மறுத்தே நீ பயந்து ஒளிந்து ஓடாதே பாடம் படித்து பெரியவனாய்-பின்பும் பாட்டன் பாட்டியை மறக்காதே

ஆனந்த வாழ்வு....

மேகமெல்லாம்  ஒன்று சேராதோ மோதிக்கொண்டு மழையும் தராதோ தாகமெ ல்லோர்க்கும் தனியாதோ-தமிழ் தரணியெல்லாம் முழுதுமாய் நனையாதோ விவசாயம் மீண்டும் நன்கு பெருகாதோ விளைச்சலுக்கு நல்ல விலை அடங்காதோ உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காதோ  -அதனால் உழவனுக்கு  மீண்டும்  வாழ்வு ஒளிராதோ பாடுபட்டுச் சேர்த்தப் பணம் பன்மடங்காய் மீண்டும் உயராதோ பணிசெய்வோர் கடன் சுமையும்-சிறிதும் பனியாக உருகிக் குறையாதோ தேகமெல்லாம் சேர்ந்த நோய்கள் தீர தெளிவான மருந்தொன்று படைக்காதோ தேடித்தேடி நல்லுணவை ருசித்து-இன்பமாய் தினமெல்லோரும் புசித்து மகிழ்வாரே கடனில்லா இல்வாழ்க்கை அமையாதோ கஷ்டமெல்லாம் நிம்மதியாய்  தீராதோ அளவான குடும்பங்கள் மகிழ்ச்சியாய் ஆனந்த வாழ்வு மீண்டும் கிடைத்திட்டால் கனவில்லா நெடுந்தூக்கம் வந்திடுமே-மகிழ்ச்சி கடலெனவே நல்வாழ்க்கை அமைந்திடுமே தினந்தோறும் மகிழ்ச்சி கிடைத்திடுமே-மக்கள் தீராத நோயெல்லாம் விரைவில் தீர்ந்திடுமே

தனிமையின் தவிப்பு

தனிமை ஏக்கம் நோயாமே-அதைத் தவிப்பவர் சொன்னால்  நியாயமே இளமை முதுமை இரண்டிலும்-இப்படி இனிமை மறுக்க  வேண்டாமே இணையை இழந்த காரணத்தால் இன்றும் மறக்க முடியலையே இதுவும் வாழ்வா என்றெண்ணி-என் இதயம் நொறுங்கிப் போகிறதே துணையாய் வீட்டில் இருந்தாலும் துன்பம்  மறந்து வாழ்ந்தாலும் கனிவாய் போற்றி  வந்தாலும்-அது தனியாய் மகிழ்வாய் இருக்காதே கையில் ரூபாய் கோடி  இருந்தாலும் கவலை இன்றி வாழ்த்தாலும் பொய்யைச் சொல்லி மகிழ்ச்சியாய்-தனிமை பொம்மை வாழ்க்கை இதுதானே பணியில் இருந்த நண்பனெல்லாம் துணையும் சேர்ந்து வாழ்வதால் இணையாய் இருந்த காலத்தை-எண்ணி இன்றும் அவர்போல்  இருக்கத் தோணுதே தனிமைத் தவிப்பை  தவிர்த்திட லாமா இனியும் அதுபோல் இருக்க வேண்டுமா பணமோ மனமோ மாற்றுமோ-அன்பை பகிர்ந்து என்னுடன் வருவார் யாரோ துணையை மறக்க துயரைப் போக்க பிணையாய் யாரும் வருவாரோ பேதைமை இன்றி இருப்பாரோ-மகிழ்ச்சி பொங்க அன்பை மீண்டும் தருவாரோ

வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா

குருவை மிஞ்சினால் கோபப்பட்டு  விடுவாரா கோபத்தில் என்மேல்-செல்லமாய் சேற்றை பூசி விடுவாரா இன்னும் கொஞ்சம் முன்னேற இனிய வார்த்தைச் சொல்வாரா இப்படியே இருக்கட்டுமென ஓட்டுப்போட மறுப்பாரா கூட்டத்தில் என்பேரை கூப்பிட்டு அழைப்பாரா கோடிபுண்ணியம் கிடைத்திடவே கொஞ்சி என்னை அணைப்பாரா வீட்டுக்கு என்னையழைத்து விருந்தும் கூடத் தருவாரா வீறுகொண்டு சென்றிடவே வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா ஒன்றுமே புரியவில்லை ஊமையாய் நிற்கின்றேன் நன்றே தெரிந்த நான்கு -வார்த்தை இன்றே உரைப்பீரே நல்லோரே

சின்னஞ் சிறு விதைகள்

கெடுத்து  வாழ்வதால் கிடைக்காது நட்பு கொடுத்து வாழ்வதால் குறையாது அன்பு                ***** உழைப்பவன் வாழ்வு ஊமையாகி விடாது உழைக்காமல்  என்றும் உயர்ந்துவிட முடியாது                ***** நேர்மையாய் வாழ்பவன் நிம்மதியாய் தூங்குவான் நெறிகெட்டு வாழ்பவன் நீண்ட நேரம் தேடுவான்                 ***** ஏழைக்கு கிடைக்கும் எப்போதும் நிம்மதி என்றெண்ணி வாழ்வதாலே ஏற்றமில்லை சந்ததி                ****** கூட்டுக் குடும்பம் குலம் சிறக்க வாழும் கூடாவிட்டால் ஒற்றுமை நெறிகெட்டுப் போகும்              ***** கற்றக் கல்வி கடைசிவரைக் காக்கும் கற்காவிட்டால் அதுவே காலங்காலமாய் ஏக்கம்              ****** (கவியாழி)

பட்டிணத்தான் வாழ்க்கை

பட்டினத்தில் வாழ்வதாய் சொல்கிறேன்  பார்ப்பவர் சிலரை  நலமா என்கிறேன் திட்டமாய் கடந்தே   வருகிறேன்-இங்கு  தினமும் இயந்திரமாய் கடக்கிறேன் எப்போதும் ஊமையாக  செல்கிறேன் எப்படியும் வாழ்ந்திடஎண்ணுகிறேன் எங்கேயும் தனியாகப் போகிறேன் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறேன் கற்பனையாய் கடமைக்காய் வாழ்கிறேன் காசுபணம் உள்ளவர்போல் நடிக்கிறேன் இத்தனையும் எதற்காய் என்றெண்ணினால் அத்தனையும் அடுத்தவர்க்கான கற்பனையே  அடுத்த வீட்டில் இருப்பவர் அறியேன் அவர்தம் உறவை ஏதென்று தெரியேன் தடுத்திடும் உறவே தடையாய் காரணம் தடுப்பதை மறுக்க தவறுதல் முறையா இருக்கிற காலம் இப்போதும் இறுதிவரை இப்படித்தான் வாழ்கிறோமே பட்டணத்தில் குறுகிய நட்பும் குடும்ப வட்டத்திலும் குறையாய் சொல்லாமல் வாழ்கிறோமே உணர்வினால் இந்தியனாய் தமிழனாய் உரக்கச் சொல்லி சிரிக்க இயலுமா கலகம் செய்யும் சாதி மதம்-பட்டணத்திலும் கடந்தே வாழ நம்மால்  முடியுமா

நேசமுள்ள நட்பு

சொந்தமாய் உறவாய் சொல்லமுடியா உணர்வாய் நெஞ்சமே மகிழ்வாய் நேசமுடன் இருப்பார் காசுபணம் தேவையில்லை கற்பனையாய் வருவதில்லை நேசமுள்ள நட்புக்கு-எப்போதும் நேரம் காலம் போதவில்லை ஆணோ பெண்ணோ அன்புக்கு விலையேது அடுத்தவரை நம்பிவிட்டால் அவதிக்கு உணர்வேது ஏசுவோர் இவரைப்பற்றி என்னென்ன சொன்னாலும் பேசுவோர் தவறாக-பிரிக்க பெருங்குறையைச் சொன்னாலும் ஈசனே எதிரில் வந்து இல்லாததைச் சொல்லி இருவரையும் பிரித்தாலும் இயலாமல் போய்விடுமாம் உறவென்றே இருப்பார்கள் உருகியுருகியே சிரிப்பார்கள் பெருமையாக நட்புகொண்டு பேரின்பம டைவார்கள் துன்பமே வந்தாலும் தோள்கொடுத் திருப்பார்கள் துடிப்போடு  எப்போதும்-அன்பு துணையாக இருப்பார்கள்

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more