Posts

Showing posts from February, 2014

தெய்வங்கள்

தெய்வங்கள்

இறைவனைக் காணவில்லையா?

இறைவனை இன்ப மாக்க இன்னிசைச் சத்தம் ஒலிக்கப் பறையடி மேளம் முழங்கப் பாட்டுப்பாடி ஆட்டமாடி வேட்டுச் சத்தம் கேட்டுமே வெளிச்சமாய் ஒளி வீச உடுக்கை அடித்துப் பாடி ஊரே ஒன்றாய் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு பொங்கல் வைத்து நல் விருந்துப் படைத்து நலமாக வாழ வேண்டி உள்ளவரும் இல்லாத ஏழையும் ஒன்றாக தேர் இழுத்து பல்லா ண்டாய் மகிழ்ந்தும் பரவசமாய் வேண்டி வந்தும் எல்லோரும் அன்பாய் அழைத்தும் யாருமே பார்க்க முடியாத பொல்லாத சக்தி அவன் பொய்யாக வாழ்கின் றானோ (கவியாழி)

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....

துணையாய் தொடர்ந்து வந்து தோழனாய் நட்பு கொண்டு மனதில் குடிகொள்ளும் மனைவியாய்இருக்க வேண்டும் பெற்றவரை பிள்ளைகளைப் போல் பேதமும் பார்க்காது விருப்பமாய் உற்றாரும் வாழ்த்திச் செல்லும் உற்றவளின் குணமே வேண்டும் பிறி தொன்றும் கேட்காத பிறரைப் பற்றிக் கூறாத அன்புடனேஆசை கொள்ளும் அன்னையாய் இருக்க வேண்டும் ஆசை அன்புக் கென்று அகம் மகிழ பிள்ளையுமே அளவான செல்வமும் சேர்த்து அன்பான குடும்பம் வேண்டும் பணி முடிந்து வரும்போது பணம் மட்டும் கேட்காத குணமுள்ள மனைவி வேண்டும் குடும்பம் மகிழத் துணைவேண்டும் (கவியாழி)

தேனெடுக்கும் அவசரத்தால்.....

நீரி ருக்கும் நிலத்தினிலே நிச்சயமாய் வாழ்ந்து வரும் நிம்மதியாய் வளர்ந்து வந்து நிறம் மாறி பூவாகும் பூப்பூக்கும் முன்னே தேனீ புகுந்து உள்ளே தேனெடுக்க தேன் குடிக்கும்அவசரத்தால் தெரியாமல் பூத்து விடும் குருவிகளும் கொத்தித் தின்ன கொள்கையுடன் படை யெடுக்க கொஞ்ச நேர இடைவெளியில் வண்டுகளே தேன் குடிக்கும் வண்ட துவும்  கொண்டாடி வேலையினை செய்த பின்பு கண்டதுமே பறிக்கத் தூண்டும் கண்ணி மைகள் ஊஞ்சலாடும் வண்ணங்களோ பலநிறத்தில் வயது வந்த பெண்களையும் எண்ணமதை கவ்விச் சென்று எடுத்துடனே சூடச் சொல்லும் பெண்மணியின் பூ வாசம் பொறுமை யின்றி ஆண்களையே போரின்றி உடன்படிக்கை பெண் மனதில் குடியேறும் கண்ணி ரண்டும் ஒப்பந்தம் கண்ணடித்து செய்து கொண்டு எண்ணியதை இணை யிரண்டும் இனிமையாக உறவு கொள்ளும் (கவியாழி) காதலர் தின வாழ்த்துக்கள்...

பொறுப்புள்ள தந்தையாய்....

பொறுப்புள்ள தந்தையாய் இருந்து பிள்ளையைப் படிக்க வைத்து மறுத்திடா செலவு செய்து மக்களைக் காத்திடு உண்மையாய் உணர்த்திடு உள்ள கடமை உன்னுடைய வேலை யென்று உள் வாங்கிப் புரிந்திடவே உதவியாகச் சொல்லிக் கொடு தடம் புரண்டு செல்லாமல் தன் மானம் இழக்காமல் இடம் பொருள் ஏவலையும் இன்முகமாய் சொல்லி வளர்த்திடு நன்னடத்தை நா நயம் நல்லோரின் நல் ஆசியும் எல்லாமும் தெரிந்திடவே எப்போதும்உணர்த்தி விடு மென்மையாக சொல்லிக் கொடு மகிழ்ச்சியாக உணர்த்தி விடு பெண்மையின் உயர் தத்துவத்தை போற்றிப் போற்றி வாழவிடு

கனவுகள் தரும் தொல்லை

உதிரிக் கனவுகளை நினைத்து உள்வாங்கி நினைத்தால் உண்மை யது புரியாது உறக்கம் மீண்டும் வாராது தெருவோரம் நடந்த நிகழ்வோ தென்றலென வீசும் காற்றோ வண்ண நிறம் கொண்ட வாசமுள்ள பூக்கள் வாசமன்றி உயிர் நீத்து மறைந்த உற்றாரும் பெற்றோருமே வந்து உண்மை ஏதோ சொல்ல உருப்படியாய் புரியாமல் இருக்கும் கற்பனையான கனவு வந்து கால மெல்லாம் வருத்த நற்பலனை அறிய வேண்டி நாலுபேரைக் கேட்டு தெளிய அத்த னைக்கும் காரணமாய் அனைவருமே மாற்றிச் சொல்லி நற்பலனாய் மட்டும் சொல்வர் நல்லதா கெட்டதா புரியாது ஆழ்மனதில் அடியெடுத்து ஆனந்தமாய் உறங்கும் போது நான் கண்ட கனவுகள் நல்ல பலன் தந்ததில்லை (கவியாழி)

எப்போதும் வெற்றிபெற...

மழுக்கினால் மீண்டும் கூராகு மறுபடி சிறந்து  சீராகு தடுக்கினாலும் விழுந்து விடா தைரியமாய் நிமிர்ந்து நில்லு களப்பணியில் கவலையின்றி கருத்துடனே செய்ய மறுக்காக் கச்சிதமாய் இலக் கதனை கடைசிவரை முடித்திடு தடுத்திடு மந்தத் தடைகளைத் தகர்த்திட முயற்சி செய்து பகிர்ந்திட்ட காரியம் முடித்து பார்போரை வியக்கச் செய்திடு எப்படியும் எழுந்து நின்று எல்லோரும் வியந்திடவே நீ எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால் எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே (கவியாழி)

பகட்டு வாழ்கையால் பயனேது ?

ஆயிரம் பலதும் சேர்த்தாலும் ஆயுளும் அதிகம் இருந்தாலும் ஆலயம் தோறும் பணமாக ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும் ஊரும் பெரும் செல்வாக்கும் உயர்ந்த பொருளை கொண்டாலும் உற்றார் அருகில் இல்லாத உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா பேரைச் சொல்லி அழைத்திடவும் பேதைமை இன்றி பழகிடவும் நாளும் அருகில் மகிழ்வுடனே நல்ல நண்பர்கள் வேண்டுமடா வாடா போடா என்றழைக்க வாழ்ந்த கதைகளை தெரிவிக்க ஆத்தா அப்பனும் அருகிலின்றி ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா சுற்றமும் சொந்தமும் துணையின்றி சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும் பற்றும் பாசமும் கிடைக்காத பகட்டு வாழ்க்கையால் பயனேது (கவியாழி)

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து  தவிப்பவரே வெறுப் படைந்து  வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை  நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)

அதிகாலைப் பனிபொழிவால்.....

Image
அதிகாலைப் பனிபொழிவால் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் அதன்பின்னே  மழைத்துளியும் அடிக்கடியும் தூரட்டும் மிதமாக மழை பெய்தும் மீண்டும் மகிழ்ச்சி  இருக்கட்டும் பதமாக சிணுங்கலோடு தொடக்கம் பக்குவமாய்  உணர்ந்து ரசிக்கட்டும் இடையிடையே கதைச் சொல்லி இதமாக தழுவ வேண்டும் இடியுடன் மழை பொழிந்தால் இறுக்கி அணைக்க வேண்டும் மெலிதான மெல்லிசையை மெய்மறந்து கேட்கவேண்டும் மேனியெங்கும் சிட்டெறும்பாய் மெதுவாக கவ்வ வேண்டும் உடலெங்கும் கொடிபோல தழுவ வேண்டும் காதல் உணர்சிகளை எழுச்சியுடன் ஒற்றுமையாய் தீண்டவேண்டும்

பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....

குற்றம் மட்டும் சொல்லாதீர் குறையைச் சுட்டி நகைக்காதீர் சுற்றம் நட்பும் சேர்ந்தேனும் சொல்லி  மாற்ற தவறாதீர் நக்கல் செய்து பேசுவதும் நல்லதைச் சொல்ல மறுப்பதுமே சிக்கல் கொண்டு இருக்கையிலே சொல்வதை முனைந்து சொல்வீரே அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள் ஆளுமை கற்க உதவுங்கள் மாணவ பருவ  வாழ்கையுமே மகிழ்ந்தே இருக்க வைப்பீரே அக்கம் பக்கம் பழகுவதை அருகில் உள்ள நண்பர்களை சுற்றம் உறவும் இருப்பதையுமே சொல்லி புரிய வைத்திடுங்கள் நிச்சயம் முடிந்தால் கல்விக்கு நேரமும் பணமும் செலவழித்து பக்கத் துணையாய் இருப்பீரே பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே

பிறப்பே தவறாய் எண்ணுதடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்   அம்மாவும் இல்லாத அறிவை   இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாமல் போலியாய்த் தேவையென நடித்து தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்   உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி   @@@@@@

ரசித்தவர்கள்