Posts

Showing posts from May, 2020

தெய்வங்கள்

தெய்வங்கள்

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா இனிமேலும் இருந்திடலாம் அன்பாய் புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும் புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா ! கற்பனையாய் படித்த அந்த நாட்களில் கல்விகற்க மட்டும் பழகி வந்தோம் விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம் கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால் கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம் கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள் கைகுலுக்கி பாராட்டும்  பரிசும் பெற்றார்கள் இடைவெளி நேரம் விட்டதுமே இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம் மடையாய் வெள்ளம் செல்வது போல் மாலையில் பறந்தே சென்று விட்டோம் நெடுநாள் தொடர்பு மறந்திருக்க நேசமும் பாசமும் சேர்த்திழுக்க பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில் பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்  கவியாழி.கண்ணதாசன் 10.04.2020.சென்னை

இளமைக் கால நண்பர்கள்

Image
நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பு முதலில் உள்ளவர்.சா.திருமாவளவன் அடுத்தவர் சரவணன் என்ற அமுலு நாங்கள் மூவரும் சேலத்தில் புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் சேர்ந்த  நாள் முதல் சேர்ந்து பழகிவந்தோம்.மூவருக்கும் அரசுப்பணி கிடைத்ததும் மற்றும் திருமணம் முடிந்ததும் பதினைந்து வருட நட்பைத் துறந்து தனித்தனியே பிரிந்தோம். நான் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தபோது அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.அதை அவர்களிடத்தில் திருமாவளவன் தற்போது வங்கி கிளை மேலாளராய் திட்டக்குடிக்கு அருகில் பணிபுரிந்து வருகிறார்.திரு.சரவணன் அவர்கள் சேலம் கோட்டத்தில் ரிவே துறையில் பணிபுரிந்து வருகிறார்

ரசித்தவர்கள்