Posts

Showing posts from 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எ

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே

பள்ளி செல்லும் பிள்ளைகளே பாடம் படிக்கப் போறீங்களா நல்ல செய்தி அறிவுரைகள் நாளும் கற்கப் போறீங்களா சொல்லக் கேட்ட செய்திகளை சொல்லி வைத்த உண்மைகளை மெல்ல மெல்ல உள்மனதில் மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள் தாத்தா பாட்டி சொல்வதிலே தமிழில் சொன்ன கதைகளிலே படித்தால் தானே புரிந்திடும் பள்ளியில் இதையும் படிப்பீரே உலகம் முழுவதும் உங்களுக்காய் உரிய முறையில் எழுதியதை பலதும் கற்றுப் பயனடைவீர் பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர் இதையே அனைத்து ஆசிரியரும் எடுத்துச் சொல்லி மாணவர்க்கும் கதையில் உள்ள உண்மைகளை கற்றுத் தெளிய  வைத்திடுவீர் உள்ளம் மகிழப் படித்திடுங்கள் உண்மை நிலையும் அறிந்திடுங்கள் உலகம் சிறக்க வாழ்ந்திடவே உயர்ந்த களமே அமைப்பீரே

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை , குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை  இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?. தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எ

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை நாளும் கடந்து போகவில்லை எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி எவரிடமும் மனது இல்லை பொன்பொருளைக் கேட்டதில்லை பெரும் தொகையும் தருவதில்லை என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும் எனக்கும் சுமையாய் இருந்ததில்லை இரவிலின்று தூங்கவில்லை இன்று மனதில் மகிழ்ச்சியில்லை என்னவென்று புரியவில்லை -எப்படியோ என்னிடம் அமைதி இல்லை திரும்பி வரும் நேரத்தை நான் திசையெங்கும் பார்த்திருக்கிறேன் தெருவோரம் நின்று நானும்-உனக்காய் தேடிவந்து  தவமிருக்கிறேன்

இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்

Image
          எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM)  பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்  எழுதி வருகிறார்.          இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும்  டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து  அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.          ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார். ""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில்  'சாந்தி நிலவ வேண்டும்'

உறவென்று சொல்ல வெட்கமடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்  அம்மாவும் இல்லாத போதும்  இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாத போலியாய்த் தேவையென நடித்தே தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்  உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி  @@@@@@

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர் கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர் நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும் நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர் வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார் வழித்துணை யாருமே வந்திட மாட்டார் வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும் வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார் கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர் கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர் பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும் பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர் ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார் ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார் ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில் ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார் கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால் கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால் வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம் வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார் இயன்றதைக் கொடுத்து உதவி செய்து எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர் ******கவியாழி******

பெற்றோரும் பிள்ளைகளும் .......

          உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால்  இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும்.  இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை  வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும்  அவசியம்.             பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள்  நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து,   பேரக் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாய்  இருந்தால் போதும்  என்பதே ஆகும்.  அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய  கட்டாயம் உள்ளது.              அவ்வாறு  படிக்கும் காலத்தில்  பொறுப்புடன் இருந்து  எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது  பெற்றோர்களின்   முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும்.               தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச்

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும் அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum ________________________________________ இளமைக்கும் முதுமைக்கும் வலையே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது ____________________________________ நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் _____________________________________ பணத்தால் எல்லாம் வாங்கலாம் நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம் _______________________________ தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே தலையில் கவசம் அணிவீரே _____________________________________ ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே? _____________________________________ மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில்  எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்? ____________________________________ இரசாயண கலவையே மனிதன். உயிர்போன பின்பு குப்பைதான் ____________________________________ இரவுக்கும் பகலுக்கும் இமை மட்டுமே சாட்சி இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி? ______________________________________ துயரமும் வாழ்கையில் பார்த்தவன் துன்பத்தை

ஊரே கும்பிடும் உத்தமி .........

தனியாக யாரும் சென்றால் துணிவாக எதிர்த்து நிற்கும் தர்பாரும் விலகிச் செல்ல தரையிலே ஊர்ந்து செல்லும் துணிவுள்ள மிருகம் அல்ல துண்டு கயிறு போலவுள்ள பணிவான உயிர் அதுவாம் பயந்து சென்று ஓடுவதாம் ஊரையே காலி செய்யும் உருண்டு நீண்ட மேனியாய் ஒருவருமே பார்க்காத தனியிடமாய் ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம் போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம் பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம் பேருக்குச் சத்தமாய் இருந்தாலும் பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம் வீறிட்டுக் கத்தி பயந்தால் விரைவாகத் தானும் பயந்தே வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும் விரைவாக உயிரைப் போக்கிடும் ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும் உண்மையில் பயந்து ஓடிடும் நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும் நல்லவளாய் ஊரே கும்பிடும்

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு நாடகம் போலவே இன்றி நன்மையே செய்திடும் வல்லமை நட்புக்கு உண்டாம் உண்மையே எல்லையே இல்லையாம் அன்புக்கு ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு தொல்லையே இல்லாத நட்பினால் துன்பமும் விலகிடும் இன்பமாய் உள்ளதைக் கொண்டே தொடருமாம் உண்மையைப் பேசியே மலருமாம் ஊரும்  மாறிப் போனாலும் உண்மை நட்பு மாறாது பணத்தால் விலையோ போகாது பண்பால் மறக்கக் கூடாத மனத்தால் அன்றி நல்லன்பை மனிதன் பெறவே முடியாது நல்லவை மட்டுமே செய்யுமாம் நன்மைத் தீமையைச் சொல்லுமாம் எல்லையைத் தாண்டிய அன்புக்கு எளிதில் பிரிவும் இல்லையாம் பிள்ளைகள் பிறந்த பின்புமே பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்  நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே நகைச்சுவை பொங்கச் செய்யுமாம் -------கவியாழி--------

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே எப்போதும் நம்மைக் காத்து தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத் தொலைக்கும்  உத்தமி அவளே ஆத்திரம் மனதில் வந்தால் அதையும்  உள்ளுள் வைத்தே அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை ஆசைக் கோபமாய்க் கடிவாள் சாத்திரம் அனைத்தும் படித்து சரியெனப் பட்டதை மட்டுமே சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய் சிறந்திடப் புரிந்திட வைப்பாள் மிச்சம் மீதியைத்  தின்று மேனியைக் கெடுத்தும் நமக்காய் உச்சி முகந்தே அருகில்-தொட்டு உண்மை மகிழ்ச்சியைத் தருவாள் சீக்கிரம் எழுந்து விடுவாள் சேவைகள் பலதும் செய்வாள் சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால் சிரித்தே சமைத்துத் தருவாள் சீருடன் உடம்பை மதியாள் சீக்கிரம் தூங்க மாட்டாள் பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில் படுத்து உறங்கச் செல்வாள் அவள்தான் பெற்ற அன்னை.....

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும் பார்த்தே ஓடி மறைந்திடுமாம் பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப் பயந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டிடுமாம் விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு வீணாய் நம்மைத் துரத்திடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினால் வேற்றுமை வந்தே பிரித்திடுமாம் விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில் வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற  பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால் இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும் சோதனை  துயரம் ஏழ்மையுமே சாதனை செய்ய வழிதருமாம் சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய் செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய் காரியம் கெட்டிடுமாம் எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால் எல்லா நன்மையும் கிடைத்திடுமாம் ......கவியாழி........

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது ரகசிய ஆசையும் தொடருது போர்த்திக்கத் தோணுது தேடுது போர்வைய பார்த்ததும் தோணுது தனிமையை இப்போ வெறுக்குது தலைவியைத் துணைக்கு அழைக்குது இளமைக்குத் தேவையும் கிடைக்குது இனிமையும் சிணுங்குது தொடங்குது இதழ்களை வருடிட விரும்புது இருவிரல் விலக்கிடத் துடிக்குது இன்னும் அதிகமாய் இருக்குது இமைகளும் ரகசியம் சொல்லுது அணைத்திட்ட இடைவெளி குறையுது ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது அவளுக்கு இப்படிச் செய்வது ஆனந்தக் கோபமாய்த் தோணுது அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும் ஆசையும் அடங்குது முடிந்தது வாழ்கையில் இன்பமாய் இருப்பது வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.              சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.            ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.           உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின்

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி கடனாய்த் தந்தவன் ஒருவன் கருவே உருவாகி வளர்த்தும் கடமை என்றே கொடுத்தால் உடமைப் பொருளும் பிடுங்கி உணவாய்த்  தின்பவள் ஒருத்தி உரிமை  கொண்டாடி மகிழ உடலைத்  தந்த அவனும் உயிரைக் கொடுத்தும் மயங்கி உற்றார் மறுத்த பிள்ளை பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா இதனை எல்லா மதங்களும் இழித்தே கூறி வந்தாலும் எப்படி மகிழ்ந்து வாழ்வாய் ஏனோ மறந்தாய் இகழ்வாய் மனிதன் மட்டும் இதனை மறந்தே வாழச் சொல்லும் கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே ...............கவியாழி..........

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள் எப்படி எளிமையாய் இருந்தே சத்தியம் தவறா வழியில் சமத்துவம் போற்றி  வாழ்ந்தே நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த நேர்வழி நெறிமுறை வளர்த்தே சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச் சீராய்த் திருத்திச்.சொல்லி குற்றமும்  தவிர்க்க வேண்டிக் குறைகளைக் கண்டு களைந்தே அப்பனும் பாட்டனின் வழியில் அன்று வாழ்ந்ததைச் சொல்லி சிற்பமாய் அறிவால் செதுக்கிச் சீராக்கி நேர்வழியில் வாழ அற்பமாய்ச் செய்யும் தவறும் அறியச் சொல்லிக் கொடுத்தே தப்பேதும் இல்லா வாழ்வை தினமும் சொல்லி வந்தே முப்போதும் மகிழ்ந்து வாழ முறையாய் சொல்லி வாழ்த்தினர் இப்போது நிலைமை இல்லை இருப்பதோ நிலைமை  தலைகீழ் தப்பதை உணர்ந்து வருந்தி தகையோரை மதிப்போர் உளரோ கற்பதை முறையாய் சொல்லாக் கல்வியால் வந்த வினையோ காலத்தை உணர்ந்தே நாமும் கடந்தும் செல்வது நலமோ

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல் கண்ணனின் அருகில் மகிழ்வாய் காரிகைக் கூட்டமும் இணைந்தே காத்திடும் காரணம் ஏனோ பலரும் சூடாய் இருக்க பருவம் மாறிய மழையும் பாவையர் மனதும் இனிக்க பயனாய் இருப்பதும்  தவறா பூத்திடும் பூக்கள் கூட பூவையர் தலையில் சூடி புரியும் லீலைகள் காண புகலிடம் தேடி வருமாம் பூச்சிகள் ஒன்றாய் கூடியே பூத்திட்ட மலர்களைக் கண்டு போட்டிகள் நடத்திட வேண்டி புதிதாய் ஸ்வரங்கள் தருமாம் பூத்த  மலர்களைத் தேடி புறப்பட்ட வண்டினைப் போல புயலாய்க் கண்ணன் வந்தே புதுமை அனுபவம் தருவான் விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தே சிரித்தே வீதியில் ஆடி இன்பமாய் விரும்பியே மகிழ்வாய்  இருக்கும் இரவில் இன்றி பகலிலும் இனிமை விரும்பும் இனங்கள் இமையால் பேசும் கண்ணன் இனிமை தருமே கார்த்திகை [[[[[[[[ கவியாழி]]]]]]]]

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம் சிந்தனை செய்யவே வேண்டும் நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில் நிம்மதி கிடைத்திட வேண்டும் சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல சங்கதி செய்திட வேண்டும் பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு பகலவன் துணையும் வேண்டும் நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை நேசித்தே போற்றிட வேண்டும் சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை சிரம்போல் காத்திடவேண்டும் கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர் கவலையும் தீர்த்திட வேண்டும் இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை இனிதே நாளும் வேண்டும் எல்லா  வளமும் பெற்று -வறுமை இல்லா நிலையே வேண்டும் பொல்லா எதிரியும் மாறி -மீண்டும் நட்பினைத் தொடர்ந்திட வேண்டும் கொடுத்து உதவி செய்ய-பணம் குறையே இன்றி வேண்டும் கொடுக்கும் மனமே எனக்கு-நாளும் குறை வில்லாமல் வேண்டும் குறைகள் அகன்றே தீர-மனம் குளிர வணங்கிட வேண்டும் குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன் கூடவே துணையாய் வேண்டும் ########கவியாழி########

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம். ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை. இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடந

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

Image
திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார் .( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்) திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார். சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அ

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே பசுமை வயலும் மாறுது பருவ மழைப் பொய்த்ததாலே பயிரும்  கருகி வாடுது நீர்நிலைகள் எங்கும் நீரின்றி நீரோட்டம் குறைந்தே போகுது நிலத்தின் தன்மை மாறியே நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது செடிகொடிகள் காய்வதாலே சிறுபூச்சியும்  மடிந்துபோகுது சின்னஞ்சிறு உணவைத் தின்னும் சினம்கொண்டே பாம்பும் அலையுது வனங்கள் எங்கும்  வறட்சியாகி வனவிலங்கும் மடிந்தே போகுது வானத்திலே ஓட்டை விழுந்து வானிலையும் மாறிப்போகுது சூரியனின் கண் சிவந்தால் சூழ்நிலைகள் மாறிப்போகுமே சுடு கதிர்கள் பட்டதாலே சூழும் மரணம் உறுதியாகுமே மனிதன் வாழ மரமும் செழிக்க மழையும் பொழிய  வனமும் செழிக்க உணவை  மீண்டும் உறுதி செய்ய உழைக்க வேண்டும் மழையே பொழிய இதைக்கண்டே இனியேனும் மக்கள் இயற்கை வளத்தைக் காக்க இனமே தழைக்க  இனியேனும் இயன்ற உதவி செய்யலாமே

ஆவியோ பேயோ அலையுது

ஆவியோ பேயோ அலையுது ஆனந்த ஆட்டமும் ஆடுது அடிக்கடி இப்படிக் காண்பதால் ஆங்கிலப் படம்போல் தோணுது அருகில் யாரோ இருப்பதுபோல் அடிக்கடி எனக்கும் தோணுது அணைக்கவும் துடித்து வருது அப்படியே என்னுள் அடங்குது ராத்திரி நேரத்தில் நடக்குது நடப்பதால் பயத்தில் குளிருது நாட்களும் தொடர்ந்தே வருகுது நம்பிக்கை இன்றி இருக்குது ஆண்டவன் நம்பிக்கை வீணாகி ஆனந்தம் கொடுக்க மறுக்குது ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது அதனால் மனமும் கலங்குது இன்பமாய்ச் சிலநாள் இருக்குது இனிமைச் சுகமும் கொடுக்குது இருந்தும் மனதும் நடுங்குது இனிய தருணத்தை  மறைக்குது துடிப்பும் தொடருது தூண்டுது தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது துவளுது தூங்கிட நினைக்குது தூங்கியும் உடம்பும் நடுங்குது கடவுளும் இல்லை தடுக்கவும் கடந்தும் மனதை வதைப்பதை கண்ட மருத்துவம் உள்ளதாய் காட்சிகள் உண்டா நண்பர்களே கனவும் இதுவே என்பதும் கண்டவர் என்போல் உள்ளதை கதையை பலபேர் சொல்வதை கவிதை வடிவில் கொடுத்திட்டேன்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும் பயந்தே ஓடி மறைந்திடுமாம் பகைத்தே நாமும் அடித்தாலே பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டுமாம் வீணாய் நிலத்தைப் போட்டாலே விளையும் நிலமும் கெட்டிடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினாலே வேற்றுமை வந்தே பிரிக்குமாம் விசயம் இன்றி வாதிட்டாலே வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல் இருப்பதைக் கொடுத்தல் நலமாகும் எதிலும் பொறுமை இருந்தாலே எல்லா நலமும் கிடைக்குமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய்க் காரியம் கெடுக்குமாம் பாசம் கொண்டே பழகுங்கள் பகைமை எண்ணம் தவிருங்கள் நேசம் ஒன்றே ஒற்றுமையாய் நேர்மை வழியில் வாழ்ந்திடலாம் ********கவியாழி*******

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,

எனது மலேசியப் பயணம்

Image
       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.    இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது. -----கவியாழி---

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!

Image
நன்றி  !              நன்றி !!                     நன்றி !!! கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கள்                                                  =15 பதிவுகளின் எண்ணிக்கை                =350 பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000  இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன். -------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் புத்தமும் சொல்லும் போதனையை புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய் கற்பனை வாழ்க்கை அறுதியில்லை கண்டதும் கேட்பதும் உண்மையில்லை அற்பனாய் வாழ்ந்திட முயலாதே அடிமை கொண்டே  வருந்தாதே உயர்வு தாழ்வு பார்க்காமல் உன்னில் வேற்றுமை காணாமல் உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய் ஒழுக்கம் நன்றே முதலீடாய் கற்பதை நன்றே புரிந்துகொண்டு காப்பாய் நீயும் அமைதிகொண்டு இனத்தில் நாமும் தமிழனாக இந்தியத் தேசத்தின் புதல்வனாக உணர்வாய் மனதில் முதல்வனாக ஒற்றுமை கொள்வோம் மனிதனாக

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே பேதைமை கொள்வோரைக் கடித்தே போதையும் கொண்டே மீண்டும் பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே அரக்கனை அழிக்க வேண்டாம் அவனையே வாழவும்  வைத்தால் அத்தனை திருடனையும்  கொன்றே அகிலமும் சிறக்கும் நன்றே உணவில் கலப்படம் செய்வோர் உரிமையை  மறுத்திடும் முதலாளி ஊரையே சுரண்டும் தலைவன் ஊழலை வளர்க்கும் மனிதன் சோம்பலை விரும்பும் மக்கள் சொன்னதைக் கேட்கா  இளைஞன் சுரண்டலைச் செய்யும்  அரசியலார் சுற்றித் திரியும் சோம்பேறி உழைக்க மறுக்கும் கணவன் ஊதாரி செலவிடும் பெண்கள் உடலை வருத்தா ஊழியன் உண்மையே சொல்லாத் திருடன் நாளையை விரும்பா மாணவன் நாணயம் இல்லா ஆசிரியர் நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே நாளும் வட்டிக் கேட்பவன் போன்றோரைக் கொன்று வதைக்கவே போக்கிடம் இன்றி அலைந்தே பொழுதும் கொல்லுதல் செய்தே பேயும் வாழட்டும் மகிழ்ந்தே =======கவியாழி======

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத சுற்றமும் நட்பும் உதவிக்காய் இஷ்டமாக வருவார்கள் இல்லையென இல்லாத ஒப்பாரி வைப்பார்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் கண்ணீர் விட்டும் அழுவார்கள் கவலைத் தீர்ந்ததும் உணராது கண்டபடித் தவறாய் சொல்வார்கள் குற்றம் சொல்லிப் பயனில்லை குறையாய் எண்ண வழியில்லை கொள்கை இல்லா மனிதனுக்கு குணமாய் அமைந்தது இயல்பன்றோ இல்லை யென்றே சொல்லாமல் இருக்கும் போதே  கொடுத்திடுங்கள் கொள்ளை இன்பம் உங்களுக்கு கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம் பெற்றப் பிள்ளைகள் பேரின்பம் பிணிகள் அகன்றே நன்றாக இல்லை என்ற நிலையாக இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம் இதயம் மகிழ உதவிடுங்கள் இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய் இதையும் நல்ல சேமிப்பாய் இருக்கும் போதே செய்திடுங்கள் -----கவியாழி-----

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் -------------------- எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல் கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள் ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள் காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள் புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும் ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை  பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள் இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள் இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய் இந்தியத் திருவிழாவ

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி திசையெங்கும் செழிக்க வைத்து வனத்தையும்  வயலையும் காத்து வானம் மகிழ  வந்தாய் பலஊர்கள் மைல்கள்  தாண்டி பாமரனும் மகிழ்வாய் வாழ பரந்து விரிந்த பாதைவழியே பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய் கிடந்த கற்கள் மலைகள் கடந்தும்  உடைத்தே நடந்து அடர்ந்த வனம் செழிக்க அமைதியாக உருட்டிச் சென்றாய் திரண்ட பாறையுமே தள்ளி திருட்டுத் தனமாய் கடத்தி வறண்ட இடத்திலும்  சென்று வழியெங்கும் சமன் செய்தாய் கண்குளிரக் காட்சி தந்த  கடவுளாய் போற்றி வந்த  தண்ணீரில் கடந்து வந்து தவமாகக் காத்து நின்றாய் சுரண்டலுக்கு ஆசைப் பட்ட சுயநலக் காரர்களின் கண்ணில் சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து சுரண்டி சுரண்டி மடிந்தாய் தினந்தோறும் மணல் அள்ளியதால் திசையெங்கும் வறட்சி வந்தே பருவம் மாறிப் பகலவனின் பார்வையால் பாமரனும் வருந்துகிறான் நிலைமாறக் காரணம் தெரிந்தும் நீயும் மௌனம் காப்பதேன் நிம்மதியைக் கெடுத்தவரை ஏன் நேரம் கொண்டே அழிக்கவில்லை விலைபேசும் நிலைக்கே சென்றாயே வேதனை வேதனையே  எமக்கு விதியில்லை வீரமில்லைத் தடுக்க வீணர்களின்  விலைவ

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய் மேல்சாதி நானென்று  சொல்கிறான் மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான் ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான் ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான் உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும் உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும் உத்தமனாய் சாதியை வளர்க்கிறான் உதவாத காரியத்தைச் சொல்கின்றான் சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான் சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான் இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில் இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான் இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான் இவனெல்லாம் இன்ன சாதியென்று எத்தனை நாள் இப்படியேச் சொல்லி எல்லோரையும் பிரித்துப் பார்க்க என்சாமியும் துணைக்கு வருகிறதோ எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ .......கவியாழி........

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு நம்மில்  சிலரும் காரணமாம் நாணயம் மறந்தும் இருப்பதனால் கிடைக்கிற  ஊதியம் போதலை கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது கொடுமையே மிஞ்சும் தங்கும் பிள்ளையின் நலன் கருதியே பிணியையும் மறந்த நிலையில் படிக்கவும் பயணமும் செய்ய பணத்தைக் கட்டியும் மீதியில்லை உற்றார் உறவுக்கும் உதவி உண்மையில் செய்ய் முடியாது மற்றோர் மதிப்பு வேண்டி மடத்தனமாய் செலவு செய்யாதே சோர்வின்றி மனம் தளராது சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு மிகுந்த வருமானம் மட்டுமே மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும் அடுத்தத் தலைமுறை வந்திட்டால் ஆனந்தம் வந்திடும் தந்திடும் அதுவரை பொறுத்திடு படிக்கவை அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து அவனுக்கும் வந்திடும் முயற்சியே அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே அதையார் தடுத்திட முடியும் அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும் ======கவியாழி=======

என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

Image
நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம். முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன் --------------------------------------------------------------------------------------------------------------------- பதில் -------- மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

ஓய்வு கொடுக்க வேண்டுமா

Image
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு ஆனந்த பயணம் செய்துவந்த அடிக்கடி நிற்காதக் களைக்காத ஆதவனின் நண்பன் கடிகாரம் வேதனையும் நாளும் கண்டவன் வேடிக்கை பலதும் பார்த்தவன் வீறிட்டு அழத்தெரியாத  பண்பன் வேகமாய் செல்லாத துணைவன் சாப்பிடும் நேரம் சொல்பவன் சாதனைக் கண்டே ரசித்தவன் சரிநிகர் சமமாய்  இருந்தவன் சங்கடம் பலதும் கண்டவன் அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம் ஆன்மா இல்லாத அவதாரம் அனைவரும் விரும்பும் பலநேரம் அதுவே எல்லோருக்கும் ஆதாரம் உடலோடு உறவாட தவறவில்லை உயிரின்றி  என்றுமே நின்றதில்லை உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை உறவாக என்னையும் பிரிந்ததில்லை ஓய்வு வேண்டியே விரும்பியே ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால் ஒளியிழந்து கையில் துடிக்கிறான் ஓய்வு கொடுக்க வேண்டுமா ------கவியாழி------

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது

வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால் வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது வேதனை மிகுந்தே தவிக்கின்றது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு  எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது  இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை நன்றே  இப்போதும் எழுத துடிக்கின்றது வெளிநாட்டு உறவின் வேதனையும் விருப்பமில்லா வாழ்வின் அவசியமும் வேடிக்கைக் காட்டிச் செல்கிறது வேதனை பலதும் மறைகிறது வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது வசந்தமும் மீண்டும் தொடர்கிறது வயதும் வேண்டி நினைக்கிறது வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது =====கவியாழி=====

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால் மனதும் துடிக்குது  தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது  தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம்  விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே  வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது  விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே நாகரீகம் மறந்து சிரிப்பாரோ நாணயம் மறந்த பேச்சாலே நல்லவர் மனதை வதைப்பாரோ அறிவும் மழுங்கி இளிப்பாரோ ஆடைத் துறந்து  இழப்பாரோ அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ அடிமை மதுவால் ஆவாரோ குடியால் மென்மை துறப்பாரோ குடும்பம் இழக்க நினைப்பாரோ குழந்தை பெறவே மறுப்பாரோ குணத்தை இழந்து தவிப்பாரோ பெருமை அடைந்து மகிழ்வாரோ பணத்தை அழித்து திரிவாரோ பெண்ணின் சாபம் பெறுவாரோ பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ மிகுந்த குடியால் குடும்பமே மேன்மை இழந்தும் தவிக்குமே மற்றோர் மனதும் வருந்தியே மனிதனை சிரிக்க வைக்குமே இல்லறம்  அழிய  காரணம் இதையேன் மகிழ்வாய் நினைக்கனும் இனியும் சிலநாள் தவிர்க்கனும் இனிமை வாழ்வும் தொடரனும் ===கவியாழி===

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே இல்லறம் சிறக்குமே  கண்டீரா இன்னலும் தீர்ந்திட சென்றிரா இன்பமாய் இனியச் சுற்றுலா மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த மிதமாய் குளிரும் தரைபகுதியும் நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும் நிலமேத் தெரியாத பணிப்பகுதியும் உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே துன்பமும் நீங்கிடும் துணையாலே தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில் அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில் அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா பண்பையும் நன்றே மாற்றிடும் பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும் இன்பமாய் சிலநாள் இருந்தால் இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம் ---கவியாழி---

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா அழகிய நாட்களை மறந்திட அன்பை மீண்டும் கொடுத்திட பழகியே நேசத்தை காட்டிட படைத்தவர் உயிரை மீட்டிட தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட திங்களும் வணங்கிட செய்திட்ட மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட  மகனாய் என்னை படைத்திட்ட உறவை மறந்து பிரிந்த உண்மையில் அன்பைப் பகிர்ந்த உணர்ச்சியில்  நான் வருந்த உடையோரை எங்கே மறைந்தீர் தினம் தோறும் வேண்டுகின்றேன் திங்கள் தோறும் அழைக்கின்றேன்  விரும்பாது சென்ற பிதாக்களே வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன் ---கவியாழி---

இன்றைய மாணவர் வாழ்க்கை

இன்றைய  மாணவர் வாழ்க்கையோ இழிந்தே செல்லும் நிலையாலே பண்பை மறந்தே மாணவனும் பகலில் குடித்து கெடுவதுமேன் மகனும்  மறைந்து குடிப்பதில்லை மாணவனாய் இருந்து படிக்கவில்லை அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா தினமும் பணமே கொடுப்பதுமேன் அறிவை வளர்க்கும் மாணவன் அடிமையாகும் மதுவைக் குடித்து அறியாமல் செய்யும் தவறுக்கு அப்பனும் ஆத்தாளுமே துணையாமே இளமை  வாழ்வோ சிலகாலம் இனிமை சேர்க்க ஒழுங்காக இல்லமும் உன்னைக் கொண்டாட இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ தினமும் கற்பாய் முறையாக தினமும் படிப்பைத் தொடங்கினால் தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன் வேதனையை மறைக்க வைப்பவன் எல்லா  வீட்டிலும் இருப்பவன் ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன் கொள்ளைப் பணத்தை முழுங்கி குடும்பம் முழுதையும் வதைப்பவன் இல்லை யென்றாலும் விடமாட்டன் இம்சையை தீர்க்கவே  விரும்புவான் தொல்லை கொடுக்கும் வலிக்கு தோதாய்  வந்து காப்பவன் பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும் பிணியைத் தீர்த்து வைப்பவன் எத்தனை  நிறத்திலும் இருந்தாலும் எல்லோர் மனதைப் போலவே துள்ளிச் சிரித்தே தொடர்வான் துணையாய் கூடவே வருவான் வறுமை வயதும் பாராமல் வாழ்வை தொடர விரும்பினால் வள்ளல் போலவே  நிம்மதியை வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான் முதியோர்தின வாழ்த்துக்கள் ---கவியாழி--

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more