Posts

Showing posts with the label /கவிதை/சமூகம்/ மகிழ்ச்சி

தெய்வங்கள்

தெய்வங்கள்

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது

வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால் வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது வேதனை மிகுந்தே தவிக்கின்றது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு  எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது  இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை நன்றே  இப்போதும் எழுத துடிக்கின்றது வெளிநாட்டு உறவின் வேதனையும் விருப்பமில்லா வாழ்வின் அவசியமும் வேடிக்கைக் காட்டிச் செல்கிறது வேதனை பலதும் மறைகிறது வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது வசந்தமும் மீண்டும் தொடர்கிறது வயதும் வேண்டி நினைக்கிறது வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது =====கவியாழி=====

வணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன் மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன் விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும் விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும் மதிகெட்டும் மனமும் புண்பட்டும் மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன் வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின் வசதிஇன்றி தினமும் தவித்தேன் கதையும் மாறியது கடந்தது கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது நிலையும் தேறியது நெட்டும் நிம்மதிதேடி இன்றுதான் வந்தது வலைப்பக்கம் வாராது இருந்தேன் வாழ்கையில் எதையோ இழந்ததாய் வாரம் இரண்டும் தவித்தேன் வந்துவிட்டேன் இனி மகிழ்வேன் துணையாக வந்த எல்லோரும் துடிப்பாக மீண்டும் வாருங்கள் விலையாக அன்பைத் தருவேன் வணங்கியே ஆசியும் பெறுவேன்

ரசித்தவர்கள்