60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....
இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும் இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும் புதிதாய் தொடங்கும் பொழுதும் கழிய-பறவையாய் புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய் பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும் பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம் பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து பாசம்தேடி மகிவாய் பறந்து போவேன் வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை வாழ்வில் நட்ப்பை வறுமையாய் விட்டதில்லை தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை தவிக்கவிட்டு தனியாய் நடந்தே சென்றதில்லை வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும் ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை நல்ல நேரம் பார்த்து செய்ததில்லை கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய் கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன் இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை தன்னலம் கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல் தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை ---கவியாழி--- சென்னை 11.07.2020 ...