Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம் மனமின்றி தவித்தால் மோதலாம் விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால் அபத்தமாய் வேறு சாதிஎன்பர் ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ அருகில் ஏனோ மௌனம் அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும் மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய் சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில் சொந்தமில்லை பந்தமில்லை

பனிக்காலம்

Image
கணவன்   கார்த்திகை மாத பணி கடுமையால்-குளிரில் கணவனை  நோக்கும் இளமையாய் கையிலிருந்த காசை கரியாக்கியதால் -கடனோடு செய்வதரியாமல் சினம் கொள்வார் இம்மாதம் மனைவி கண்விழித்துப்  பார்த்தும்க் கதிரவனை காணாது -நேரம் காலம் கடந்து அதிர்ச்சியாய் ஏழத்தோன்றும் இன்னும் அருகில் இணைந்து படுக்க-இன்முகம் பண்ணும் சேட்டைகள் அதிகம் ஏங்கும் கடவுள் பக்தர் சாத்திரம் படித்து நேர்த்தியாய் திரு-சன்மார்க்கம் போற்றிட சொல்லும் பெருமையாய் ஆத்திரம் அடங்க  அகிலம் போற்ற-கோவில் சத்திரம் செல்வர்  சாமியிடம்  சரணடைவர் காதலர்கள் புது துணியோடு  புறப்படும்  இளசுகள் -சினிமா பல புதிய படம் காண்பர்  இணையாக தனிமையில் தவிக்கும் இளம் சிட்டுகள்-தடுமாறும் இனிமை தேடி இரவையே தவிர்க்கும் சிறுவர்கள்  படிக்க மறுக்கும்  பணியால் உறக்கம்-எழுந்து பாடம் படிக்க குளிரில் நடுங்கும் தேர்வு தொடங்கும் பயம் கொள்ளும்-தேர்வெழுத தினமும்  உண்ண மறுக்கும் பட்டினியாய்

கவியாழி : நீ மனிதனாய் யோசி

கவியாழி : நீ மனிதனாய் யோசி : மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழ...

கவியாழி : இமை மூடி பாருங்கள்

கவியாழி : இமை மூடி பாருங்கள் : இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்க...

மகிழ்ச்சியான தீப திருநாள்

Image
மகிழ்ச்சியான தீபாவளி -2012 --- மகிழ்ச்சியான நேரமிது மக்களின் நாளிது புகழ்ச்சிக்காக பொருள் சேர்க்கும் நன்னாழிது இகழ்ச்சியாக பேசியோரும் வாழ்த்தும்நாள்-எல்லோரும் நெகிழ்ச்சியாக கொண்டாடி மகிழும் தீபத்திருநாள் ஏழைப் பணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் எல்லோரும் ஏற்று இனிதாய் போற்றி-தீபாவளியை எளியோரும் விரும்பும் இனிய பெருநாள் எப்போது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க இளசுகள் ஓடிவந்து பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைஞ்சிருக்க-சேவல் கூப்பாடு கேட்காமல் எழுந்திருக்கும் ஒருநாள் புத்தாடையில் புதுமஞ்சள் சாந்திட்டு உடுத்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிள்ளை அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீடெங்கும் கூறாமல் – சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி திருநாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியேனும் ஓசி வாங்காமல் உழைத்து வைத்திருந்து புதுத்துணி வாங்கும் பொல்லாத தீபாவளி-இன்று இளசுபெரிசு எல்லோரின் இனிமையான திருநாள் கடந்த நாட்களில் பட்ட கஷ்டமெல்லாம் காணாது மறந்து இஷ்டமாக விரும்பும் எல

ரசித்தவர்கள்