Posts

Showing posts with the label / கவிதை/சமூகம்/நகைச்சுவை

தெய்வங்கள்

தெய்வங்கள்

எனது நண்பன்

Image
கண்ணாலே கதை சொல்லும் கயவன் கண்டவுடன் வாலாட்டும் துணைவன் பண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை பார்த்ததுமே கத்துகின்ற மடையன் வேண்டுமென்றால் அருகில் வந்து  வேடிக்கையாய் விளையாடிச் செல்வான் வேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து  விழிதிறந்து என்னவென்று கேட்பான் கத்தாதேஎன்றாலும் நிறுத்தாமல் குறைப்பான் காக்காகுருவிடனும் விளையாடத் துடிப்பான் கன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால் கண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான் மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான் மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான் திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான் தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான் அன்பாய் இருப்பான் அருகில் வருவான் பண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும் துன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும் நண்பன் இன்னும் சிலநாள் மட்டும் (கவியாழி)

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை கண்டு பிடிக்க முடியவில்லை கண் அழற்சியானதால் எப்போதும் கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க இண்டு இடுக்கு  இடமெல்லாம் இரண்டு நாளாய்த் தேடுகிறோம் இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை நாவறண்டு கத்தினாலும் முடியாது நாநயமாய் பேசினாலும் வந்திடாது நான்வைத்த இடத்தைக் காணாமல் நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது மூன்று வயது நினைவுகூட முந்தி கொண்டு வருகிறது மூக்கில் மாட்டும் கண்ணாடியின் மூடிப்போன இடம் தடயமில்லை பேயறைந்த முகத்தைப் பார்த்து பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள் பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து பேருதவி மனைவியும் செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தவரின் கதையை விருப்பமின்றிச் சொன்னபோது  நானும் விட்டுவிட்ட பொருள் கணக்கை விபரமாகச் சொல்ல முடியவில்லை

ரசித்தவர்கள்