
தேனெடுக்க ஆசையாய் என்னை
தேடிவரும் சிறுப் பறவையே !
நான் வணங்கும் மன்னவன்
நாளை வேண்டும் வேளையில்
தான் குடிக்க வேண்டியதை
தாகம் தீர்த்து சென்றவரை
ஏன் தடுக்க முடியவில்லையென
என்மீது கோபபட்டால் என்செய்வேன் ?
என்னை விட்டு விலகிவிடு
விரைந்து தூர பறந்துவிடு
பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால்
கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு