Posts

Showing posts with the label / காதல்/ கவிதை/பெண்மை

தெய்வங்கள்

தெய்வங்கள்

தேடிவரும் பறவையே

Image
தேனெடுக்க ஆசையாய் என்னை தேடிவரும் சிறுப் பறவையே ! நான் வணங்கும் மன்னவன் நாளை வேண்டும் வேளையில் தான் குடிக்க வேண்டியதை தாகம் தீர்த்து சென்றவரை ஏன் தடுக்க முடியவில்லையென என்மீது கோபபட்டால் என்செய்வேன் ? என்னை விட்டு விலகிவிடு விரைந்து தூர பறந்துவிடு பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால் கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க இதழிரண்டில் தேனொழுக அமைதியான ஆற்றலுடன் -அவன் அடியெடுத்து வைத்தவுடன் தடைசொல்லி மறுப்பாரா தயவினையும் வெறுப்பாரா இடையிடையே சிணுங்கி-இன்பமதை இறுக்கமின்றி விடுவாரா சிரிப்புடனே செவ்விதழை சினுங்காமல் கடிப்பாரா சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து சினத்துடனே இழப்பாரா கதை தொடர காத்திருந்து கதவை மூடி வைப்பாரா படையெடுத்து வருபவரை-ஏற்று பாங்குடனே வைப்பாரா பத்துமாதம் முடியுமுன்னே பாசமதை தடுப்பாரா பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை பருகச்சொல்லி அழைப்பாரா

ரசித்தவர்கள்