Posts

Showing posts with the label கவிதை /சமூகம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்று இதமாய் இருக்கிறது

இதமான காலை இன்று இன்பமாய் இருக்கத் தோணுது நலமாக மனமும் வளமாய் நல்லதே சொல்ல எண்ணுது காலை வேளையில் காற்றும் கதைகள் பலதைச் சொன்னது கண்கள் இரண்டும் எதையோக் காணவேண்டி மேலே பார்க்குது செடியும் பூச்சியும் செல்லமாய் சேட்டை சிலதைப் பண்ணுது சேவலும் நாய்களும் இன்பமாய் சாலையில் திரிந்து ஓடுது மரங்கள் எல்லாம் இன்றும் மகிழ்வாய் சிரித்து மகிழுது மாலையில் இருப்பது போலவே மனதில் எதையோ தேடுது மழையும் இதையே கண்டு மறுபடி மறுபடி சிரிக்குது மக்களும் மழையைப் பார்த்து மகிழ்ச்சியாய் ஆடத் தூண்டுது (கவியாழி)

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை ஏளனமாய் சொல்ல வில்லை எழுச்சியாக  வளர்வ தில்லை ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை குற்றமுடன்  சொல்ல வில்லை கொள்கையிலே மாற்ற மில்லை கூடி வாழும் வாழ்கையினை கெடுத்ததாக வாழ்வ தில்லை கோழைகளாய் இருந்ததில்லை கொடுத்தவரை மறப்ப தில்லை கொடுப்பதிலே குறையுமில்லை கொடுத்தவரைக் குறைத்ததில்லை போதுமென்ற மனதே எல்லை போட்டிப் போடுவது மில்லை பொக்கிஷமாய் நல்லுறவை பேணிக்காக்க தவற வில்லை நாளைக்கான தேவையினை நாள்தோறும் நினைப்ப தில்லை நன்மையென அறிய வில்லை நாட்டுநடப்பு  தெரிவ தில்லை வேலையுமே  நாளும்  மில்லை வீட்டில் மட்டும் பஞ்சமில்லை விருந்தினரும் வந்து விட்டால் விருந்தளிக்க மறுப்ப தில்லை பேழையாக நட்பதுவை  அவன் பிரிந்து நின்று பார்த்த தில்லை பெற்றவரை விடுவ தில்லை பேணிக்காக்க தவற வில்லை

ரசித்தவர்கள்