இன்றும் வாழும் பாரதியே....
 
   இன்றும் வாழும் பாரதியே  எப்படி மறப்பேன் உனையே !  எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று  எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்!  உன்னை விட்டு வைத்தால்  உலகையே மாற்று வாயென,  பெண்மை யொத்த சிலரால்-மனதால்  பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய்  கண்ணைபோல் வளர்த்த மகளை  கலப்புத் திருமணம் செய்து  கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி  கண்குளிர பார்க்க எண்ணியதை,  திண்ணைத் தோறும் சென்று  தீராப்பழி சுமத்தி வந்தோர்  பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி  திருமணம் செய்து வைத்தார்  கண்ணை இழந்துக் கலங்கிக்  கடின வாழ்க்கை வாழ்ந்தும்  காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால்  கண்துயில வைத்து விட்டனரே!  (கவியாழி)    
