Posts

Showing posts with the label கவிதை/கல்வி/மகிழ்ச்சி

தெய்வங்கள்

தெய்வங்கள்

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு நம்மில்  சிலரும் காரணமாம் நாணயம் மறந்தும் இருப்பதனால் கிடைக்கிற  ஊதியம் போதலை கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது கொடுமையே மிஞ்சும் தங்கும் பிள்ளையின் நலன் கருதியே பிணியையும் மறந்த நிலையில் படிக்கவும் பயணமும் செய்ய பணத்தைக் கட்டியும் மீதியில்லை உற்றார் உறவுக்கும் உதவி உண்மையில் செய்ய் முடியாது மற்றோர் மதிப்பு வேண்டி மடத்தனமாய் செலவு செய்யாதே சோர்வின்றி மனம் தளராது சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு மிகுந்த வருமானம் மட்டுமே மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும் அடுத்தத் தலைமுறை வந்திட்டால் ஆனந்தம் வந்திடும் தந்திடும் அதுவரை பொறுத்திடு படிக்கவை அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து அவனுக்கும் வந்திடும் முயற்சியே அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே அதையார் தடுத்திட முடியும் அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும் ======கவியாழி=======

ரசித்தவர்கள்