Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ மனிதம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத சுற்றமும் நட்பும் உதவிக்காய் இஷ்டமாக வருவார்கள் இல்லையென இல்லாத ஒப்பாரி வைப்பார்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் கண்ணீர் விட்டும் அழுவார்கள் கவலைத் தீர்ந்ததும் உணராது கண்டபடித் தவறாய் சொல்வார்கள் குற்றம் சொல்லிப் பயனில்லை குறையாய் எண்ண வழியில்லை கொள்கை இல்லா மனிதனுக்கு குணமாய் அமைந்தது இயல்பன்றோ இல்லை யென்றே சொல்லாமல் இருக்கும் போதே  கொடுத்திடுங்கள் கொள்ளை இன்பம் உங்களுக்கு கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம் பெற்றப் பிள்ளைகள் பேரின்பம் பிணிகள் அகன்றே நன்றாக இல்லை என்ற நிலையாக இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம் இதயம் மகிழ உதவிடுங்கள் இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய் இதையும் நல்ல சேமிப்பாய் இருக்கும் போதே செய்திடுங்கள் -----கவியாழி-----

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

ரசித்தவர்கள்