Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ மரம் வளர்ப்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

காடுகளில் மரம் வளர்ப்போம்

காடுகளில் மரம் வளர்ப்போம் கழனி ஓரம் செடி விதைப்போம் நாடு முழுக்க  இயற்கையை நாடிச்  செல்ல அறிவுறுத்துவோம் ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே தேடித்தேடி செடி வளர்ப்போம் அதனுடைய சாணத்தையே அடியுரமாய் போட்டிடுவோம் சாலை ஓரம் மரங்களும் சமதூரம் நட்டு வந்து வேளை தோறும் நீரூற்றி வளரும்  வரை காத்திடுவோம் தூரம் செல்லும் மக்களுக்கு துணையாக நிழல் கொடுப்போம் தொடர்ந்து வரும் சூரியனை தூரமாக நின்று பார்ப்போம் ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து ஏரிக்குளம் அருகில் வளர்த்து பாலை நிலமும் பக்குவமாய் பரந்த காட்டையும் அமைப்போம் வீடுதோறும் பச்சைக் காய்கறிகள் விளைவித்தே தினம் உண்போம் காடு கழனி குன்றெல்லாம் காக்கும் மரங்களை  வளர்ப்போம்

ரசித்தவர்கள்