Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/உணவு

தெய்வங்கள்

தெய்வங்கள்

பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்

Image
                                               பச்சைக் கீரையைப் பார்த்தவுடன் நிச்சயம் உண்ண மனம் வருதே அதிக விலையில் விற்பதில்லை அதையும் சிலரோ விரும்பவில்லை பார்த்தால் நம்மைக் கூப்பிடுமாம் பக்கத்தில் போனால் நாறிடுமாம் பயந்தே வாங்கி சமைத்தாலே பலனோ வருவது நோய்நொடியாம் மழையில் பணியில் அதிகமாக மலிந்த விலையில் கிடத்திடுமாம் மனதோ உண்ணத் துடித்திடுமாம் மறுபடி மீண்டும் தடுத்திடுமாம் குப்பை மேடு கழனிகளில் குளிர்ச்சியாக மிகுந்தே வளர்ந்திடுமாம் கோழி ஆடு மாடுகளும் விரும்பி  குனிந்தே அதையும் திண்ணுடுமாம் இப்போ நிலைமை அதுவில்லை இயற்கை உரமோ போடவில்லை செயற்கை மருந்தை தெளிப்பதனால் சீக்கிரம் வளர்ந்தே விடுகிறதாம் இயற்கையை மாற்றி வருவதனால் இழப்போ மனித உயிர்தானே இனிமேல் கீரையை விளைவிக்க இயற்கை உரங்களை போடுங்களேன்

ரசித்தவர்கள்