Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/கடவுள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுளைக் கண்டால் சொல்லுங்களேன்.......

கடவுளைக் கண்டால் உடனடியாய் கண்டவர் வாழ்க்கைச் செழித்திடவே உடனே வரமும் கேட்பீரே உயரும் நிலையைப்  பெறுவீரே கடனே இல்லாத வாழ்க்கையைக் கஷ்டம் தராத நாட்களை தடமே முடியா பாதையை தெரிந்தும் சொல்லச்  சொல்வீரோ பகைமை இல்லா உறவுகள் பணமே கேட்கா நண்பர்கள் குணமே புரிந்த மனைவியும் கொடுமை சொல்லா பிள்ளையும் படமே எடுக்கா நாகமும் பயமே இல்லா பறவையும் பசுமை எங்கும் மாறாத படைப்பை கேட்டுப்  பார்த்தீரா எதிலும் மகிழ்ச்சி கிடைக்கவே என்றும் முயற்சி செயிக்கவே எண்ணம் முழுதும் உண்மையாய் எப்படி உதவி செய்வாரோ மனதில் என்றும் அன்புடனே மற்றவர் உயர வார்த்தைகளை தினமும் ஒருவர் என்றழைத்து தெரிந்த  வரத்தைக் கொடுப்பாரோ நன்மை செய்ய சொல்லுங்கள் நல்லவர் பெருக வாழ்த்துக்கள் நாளும் மகிழ்ச்சிப் பெறவே நல்ல வரங்களைக் கேளுங்கள் (கவியாழி)

ரசித்தவர்கள்