Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/வேதனை

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதனாக வாழ்க்கை முடியுமே

விலைவாசித் தாறுமாறா ஏறுது விடிந்தாலே கடனெல்லாம் அழைக்குது தரவேண்டிய வட்டியும் சேர்த்ததும்  தலைமேல முடியெல்லாம் கொட்டுது பணக்காரன் வசதியும் பெருகுது பணத்தாலே எல்லாமே முடியுது மருந்தாலே வாழ்கையை ஒட்டியும் மளமளன்னு பணமோ சேருது விலைவாசி உயர்வை எண்ணியே விவசாயி மனசும் எரியுது நிலமெல்லாம் தண்ணீர் குறைச்சலால் நெடுந்துயர்ந்த வீடாய் மாறுது பிழையாக படிக்க மறந்த பிள்ளையின் மனசும் தவிக்குது நெடுநாட்கள் படிப்பை முடித்தும் நிம்மதியாக வேலை மறுக்குது அரசாங்கம் கடமை தவறியே அநியாயம் வளர  தொடங்குது அதனாலே பலபேரின் வாழ்க்கை அடங்காத செயலைத் தூண்டுது பலபேர்கள் மடிந்து சாவதற்கு பணம் ஏனோ தகுதியாகுது மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே மனிதனாக வாழ்க்கை முடியுமே (கவியாழி)

ஆழ் மனது ....

ஆழ்ந்த மனதுக் குள்ளே அன்புடன்  கோபமும்  இருக்கும் ஆனாலும் அப்பப்போ வெடிக்கும் அதனால் மனது வலிக்கும் தாழ்ந்த நிலையினால் அது தன்னையே தரம் தாழ்த்திவிடும் தானாகப் பேசவும் ஏசவும் தனிமையை நாடிக் கொல்லும் வீணான கற்பனையை வளர்க்கும் விவேகமற்ற வேதனையைத் தரும் வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும் விடிவில்லா சந்தேகம் வகுக்கும் ஆண் பெண்களைச்  சேர்க்கும் ஆபத்தில் கொண்டுவிடும் ஊன் உறக்கம் தவிர்க்கும் உடன்பாடு இல்லாதுப்  பிரிக்கும் தான் கெட்டு தவித்தும் தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும் வீணான மனபிழற்ச்சி தரும் வேதனையும் இழப்பும் மிகும் ஏனிந்த மனநிலை இறைவா எப்படி தவிக்கிறார்  புரியுமா தவிர்க்க வழிதான் தெரியுமா தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா

ரசித்தவர்கள்