Posts

Showing posts with the label வாழ்க்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

வயது இரண்டென் ஒன்பதில்

வயது  இரண்டெண் ஒன்பதில் வாலிபம் தொடங்கிய நிலையில் பயமென தெளிந்த பருவத்தில் பார்வையால் காதல் கொண்டோர் பள்ளியைத் துறந்துமுடித்துப் பல்கலைப் படிப்பில் நுழைந்து பிள்ளையைப் பொறுப்பாய் வளர்த்து பிணையில்லா வேலைக் கிடைக்க மெல்ல வெளியுலகில்உலவ மிதமான அறிவுரைச் சொல்லி செல்லமாய் சிறகடித்துச் செல்ல சினமின்றி வழி சென்றோர் கள்ளமின்றிக் கல்வியைக் கடந்து கைநிறையக் காசுக் கிடைத்தும் உள்ளம் மாறாமல் பெற்றோர் உறவினர் நண்பர்கள் வாழ்த்துரைக்க இல்லறம் தொடங்கும் இனியோரும் இணைந்தும் பிணைந்தும் இருப்பார்கள் சொல்லறம் புரிந்தும் மகிழ்வார்கள் சோதனை இடறின்றி வாழ்வார்கள் கவியாழி.......

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை ஏளனமாய் சொல்ல வில்லை எழுச்சியாக  வளர்வ தில்லை ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை குற்றமுடன்  சொல்ல வில்லை கொள்கையிலே மாற்ற மில்லை கூடி வாழும் வாழ்கையினை கெடுத்ததாக வாழ்வ தில்லை கோழைகளாய் இருந்ததில்லை கொடுத்தவரை மறப்ப தில்லை கொடுப்பதிலே குறையுமில்லை கொடுத்தவரைக் குறைத்ததில்லை போதுமென்ற மனதே எல்லை போட்டிப் போடுவது மில்லை பொக்கிஷமாய் நல்லுறவை பேணிக்காக்க தவற வில்லை நாளைக்கான தேவையினை நாள்தோறும் நினைப்ப தில்லை நன்மையென அறிய வில்லை நாட்டுநடப்பு  தெரிவ தில்லை வேலையுமே  நாளும்  மில்லை வீட்டில் மட்டும் பஞ்சமில்லை விருந்தினரும் வந்து விட்டால் விருந்தளிக்க மறுப்ப தில்லை பேழையாக நட்பதுவை  அவன் பிரிந்து நின்று பார்த்த தில்லை பெற்றவரை விடுவ தில்லை பேணிக்காக்க தவற வில்லை

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.       விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.       எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.       அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவ

ரசித்தவர்கள்