தெய்வங்கள்

தெய்வங்கள்

வயது இரண்டென் ஒன்பதில்

வயது  இரண்டெண் ஒன்பதில்
வாலிபம் தொடங்கிய நிலையில்
பயமென தெளிந்த பருவத்தில்
பார்வையால் காதல் கொண்டோர்

பள்ளியைத் துறந்துமுடித்துப்
பல்கலைப் படிப்பில் நுழைந்து
பிள்ளையைப் பொறுப்பாய் வளர்த்து
பிணையில்லா வேலைக் கிடைக்க

மெல்ல வெளியுலகில்உலவ
மிதமான அறிவுரைச் சொல்லி
செல்லமாய் சிறகடித்துச் செல்ல
சினமின்றி வழி சென்றோர்

கள்ளமின்றிக் கல்வியைக் கடந்து
கைநிறையக் காசுக் கிடைத்தும்
உள்ளம் மாறாமல் பெற்றோர்
உறவினர் நண்பர்கள் வாழ்த்துரைக்க

இல்லறம் தொடங்கும் இனியோரும்
இணைந்தும் பிணைந்தும் இருப்பார்கள்
சொல்லறம் புரிந்தும் மகிழ்வார்கள்
சோதனை இடறின்றி வாழ்வார்கள்



கவியாழி.......


Comments

  1. 'வயது இரண்டென் ஒன்பதில்' என்றால் என்ன பொருள்?

    ReplyDelete
  2. அதே சந்தேகம் எனக்கும்!

    ReplyDelete
  3. சந்தேகம்... :) 18 வயதிலாக இருக்குமோ....

    ReplyDelete
  4. 9 2 18 வயது என நினைக்கிறேன்,,,

    கவி வரிகள் அனைத்தும் அருமை,,

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்