தெய்வங்கள்

தெய்வங்கள்

நீ மனிதனாய் யோசி




























மனித பிறப்பே மகத்தானது
மகம் பிறந்ததும் வியப்பானது

திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி
திளைத்திட்ட பெற்றவர்கள்

உழைத்திட்ட மணித்துளிகள்
உருமாறி  போனதற்காய்

இளைப்பாறி இருந்திட்டார்
இலைப்பூவாய் வளர்த்திட்டர்

குலை சிதைத்து விட்டதானால்
குடும்பமே நடுத்தெருவில்

பிழைசெய்தவர்  யார்
புரியாது  ஏன் செய்தீர்

தழைக்குமா உன் குடும்பம்
தனியாக யோசித்துப் பார்

சாதி  சண்டைகள் தேவையா
சரிகின்ற உயிர்கள் நியாயமா

சாதி சண்டையால் சங்கடத்தை
சதியாக்கும் சண்டாளன்  மடிவானா

மனிதனை  நேசி மகிழ்ந்து
மனிதனாய்  சற்று யோசி



Comments

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. nநான் தற்போதுதான் உள்ளே வந்திருக்கிறேன் ,உங்களது யோசைனைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. தற்போதைய நிலையில் அனைவரும்
    மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டிய கருத்தை
    மிக அழகான கவியாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இங்கு மனிதன் சாகவில்லை மனிதமே செத்துவிட்டது

      Delete
  4. மனிதனை நேசி மகிழ்ந்து
    மனிதனாய் சற்று யோசி

    சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவரையா! உண்மையை சொன்னேன்

      Delete
  5. நன்றி ரமணி அவர்களே இதுபோன்ற பதிவுகள் சிலராவது படித்து சொல்லுவார்கள் என்றெண்ணி கூறுகிறேன்.யாரோ ஒருவர் பார்த்து படித்து மற்றவரிடம் சொன்னாள் கூட போதுமே

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more