தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

இறக்கும் முன்னே
எதிரியை மன்னித்துவிடு-ஆனால்
துரோகியை நினைக்காதே
                  *****
நன்றியை கடமைக்கு சொல்லாதே
நன்றி உள்ளவனாய் இரு-அதுவே
நன்மையாய் தொடரும் துணையாக
                  *****
சோதனை  வரும்போது
வேதனை கொள்ளாதே-அப்போது
வீழ்த்திவிடும் உன்னை
                 *****
நேர்மை இருந்தால்
நிச்சயம் வெற்றி-ஆனாலும்
பொறுமை வேண்டும்
                  *****
மன்னிக்க தெரிந்தவன்
மனிதனாகலாம்-ஆனால்
கோழையாய் வாழ்ந்திடாதே
                   *****


Comments

  1. உண்மையிலேயே இவைகள் விதைகள் தான்...
    அருமையானது

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே இதுபோல இன்னும் தொடரும்

      Delete
  2. சிறப்பு தலைவரே..

    ReplyDelete
  3. விதைகள் முளைத்து வளரட்டும்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் ஊற்றியமைக்கு நன்றி அய்யா

      Delete
  4. அத்தனையும் அழகு...

    விதைகள் இன்னும் வீரியத்துடன் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ,நிச்சயம் வீரியத்துடன் வளரும்

      Delete
  5. சின்னஞ்சிறு விதைக்குள் தான்
    பெரிய ஆலமரம் இருக்கிறது...
    என்பதைக் கருத்தாகக் கொடுத்து
    இருக்கிறீர்கள் ஐயா.

    ReplyDelete
  6. நல்ல விதைகள்... மனதில் விதைத்து விட்டேன்... Followers-யும் ஆகி விட்டேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி,நீங்கள் என்னோடு இணைந்தமை எனக்கும் எனது படைப்புகளுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more