Posts

Showing posts with the label /பழமொழிகள்/சமூகம்/வாழ்க்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா விசயங்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும் சாப்பிடும் உணவாக பழமாக மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக ஏக்கமாக இப்படியே நிறைய விசயங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம்  நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் பெருமான்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார். நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை. அதுபோலவே பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது என்னத்தைப் பொறுத்தத

ரசித்தவர்கள்