Posts

Showing posts with the label கட்டுரை/சமூகம்/விழிப்புணர்ச்சி

தெய்வங்கள்

தெய்வங்கள்

கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்

         தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு  அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன்.          தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை  கட்டி  வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள்.         கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய்  கட்டி  அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள்.         மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம். ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை. இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடந

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

ரசித்தவர்கள்