Posts

Showing posts with the label கவிதை/சமூகம் /உண்மை

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே பசுமை வயலும் மாறுது பருவ மழைப் பொய்த்ததாலே பயிரும்  கருகி வாடுது நீர்நிலைகள் எங்கும் நீரின்றி நீரோட்டம் குறைந்தே போகுது நிலத்தின் தன்மை மாறியே நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது செடிகொடிகள் காய்வதாலே சிறுபூச்சியும்  மடிந்துபோகுது சின்னஞ்சிறு உணவைத் தின்னும் சினம்கொண்டே பாம்பும் அலையுது வனங்கள் எங்கும்  வறட்சியாகி வனவிலங்கும் மடிந்தே போகுது வானத்திலே ஓட்டை விழுந்து வானிலையும் மாறிப்போகுது சூரியனின் கண் சிவந்தால் சூழ்நிலைகள் மாறிப்போகுமே சுடு கதிர்கள் பட்டதாலே சூழும் மரணம் உறுதியாகுமே மனிதன் வாழ மரமும் செழிக்க மழையும் பொழிய  வனமும் செழிக்க உணவை  மீண்டும் உறுதி செய்ய உழைக்க வேண்டும் மழையே பொழிய இதைக்கண்டே இனியேனும் மக்கள் இயற்கை வளத்தைக் காக்க இனமே தழைக்க  இனியேனும் இயன்ற உதவி செய்யலாமே

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

ரசித்தவர்கள்