Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ காதல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன்

எப்போதோ எண்ணியதை எழுதியதை மறக்காமல் இப்போது எழுதுகிறேன் இளமையின்றி  ஏங்குகிறேன் வாழ்க்கை ஓட்டத்திலே வெற்றிபெற ஓடிக் கொண்டே வாய்த்த வாய்ப்புகளை வழிதவறி விட்டுவிட்டேன் அப்போது எண்ணவில்லை அதற்குமே நேரமில்லை அந்தகாலமும் முடிந்ததால் அதற்குமே வேலையில்லை தப்பாக நினைப்போரே தரமறிந்துப் பார்ப்போரே முப்போதும் காதலுக்கு முடிவுண்டாச் சொல்லுங்களேன் எப்போதும் மகிழ்ச்சியாய் எண்ணமதை வைத்திருக்க தற்போதே எழுதுகிறேன் தவறிருந்தால் மன்னிப்பீரே கண்குளிரப் படித்திடவும் கவிஎழுதி முடித்திடவும் காதலிக்கத் தமிழுண்டு காலமெல்லாம் மகிழ்வுண்டு

என்னுள் மழையைத் தா !

மோகமாய் பவனிவரும் பருவ மங்கை மேகமே அங்கங்கள் அசைவதால் உன் மேகலைகள் திரண்டெழுந்தே இடிவருதோ மின்னலும் கண்டவுடன் பயந்து மின்னுகிறதோ உன் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் மழை வருதோ தாகமே தீருமுன் தடம்பார்த்து ஓடும் மழைநீர் தவம் கிடக்கும் மரங்களுக்கு சேர்கின்றதோ ஆகவே மேகமாய் தவழ்ந்து வா மீண்டும் மீண்டும் அசைந்துவா என் மனதும் மகிழ வா என்னுள் மழையைத் தா

ரசித்தவர்கள்