Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையின் ஏக்கம்

Image
அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

காதலா? காமாமா? நட்பா?

Image
   விழியோடு மொழிபேசி விரலாலே கோலமிட்டு புரியாத  வார்த்தையாலே புதிராக சேர்ந்து பேசி பதியாத  நட்போடு பரிதவிப்பில் கலந்து இதழோடு இதழ் இரண்டுமே  சண்டைபோட்டு இனிமை போற்றி இனிமையான தருணமாக்கி முனகலும் முக்கலும் முகமிறுக்கி நக்கலும் கனி இரண்டையும் கசக்கி சுவைத்து இடையிடையே இணைந்து முடிவில்லா ஆனந்தமாய் முடிந்தவரை  நாதமாக்கி முடியாமல் முடிதிட்டு முகமிரண்டும் பார்த்தால் முடியாது  இன்னும் வேண்டும் மொழி தெரியா மௌனமாய் முடிதிட்டால் என்ன சொல்ல காதலா? காமாமா? நட்பா?..............

முதல்நாள் இரவு

Image
  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வரை  எரிந்தும் நலுங்கு நாட்டியமும்-கச்சேரி நாளெல்லாம்  பெரு விருந்தாய் விடியும்முன் எழுந்து விமரிசையான சடங்குகளுடன் காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி மாலை மாற்றி  மகிழ்ந்தேன் தாலிகட்டி தவம் கலைத்தேன் தைரியமாய் அருகில் அமர்ந்தேன் நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான நலபாகத்துடன் விருந்து படைத்து சேலைமாற்றி சிவந்த முகத்துடன் சொம்பில் பாலுடன் நடந்தேன் மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய் ஆளை பார்த்தேன்  ஆர்வமாய் தோளை பிடித்து தொட்டதும் துவண்டு விழுந்தேன் சரிந்தேன் துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும் தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்

மெல்ல பேசும் செல்ல கூட்டம்

Image
  துள்ளி யோடி துரத்தி பிடித்து மெல்ல வந்து பல்லை காட்டி சொல்மாய்  சிணுங்கி மெல்ல ஓடிடும் மின்னலென ஓடி மேகமாய் மறைந்திடும் பிள்ளை மொழி பேசியே பிடிசோறும் திண்ணிடும் தொல்லை என்ற வார்த்தையே மெல்ல நம்மை ஈர்திடும் இல்லையென்று சொல்லாமல் இன்பமேங்கும் தந்திடும் பிள்ளை கூட்டம் பிரச்சனைகளின் கூடாரம் இல்லை  அதுபோல் இன்பமான மழை நேரம்

சின்ன பசங்க நாங்க

Image
சிவந்த உதடும்  சிற்றிதலும் நவ அழகும் நிறைத்திருக்க தவழ்ந்து வரும் பேரழகே-கண்ணே தவம்கிடந்தேன் உன்னை காண கவலை மறந்து கண் சிமிட்டி கண்டோரையும் உடன் அழைத்து மலர்ந்து விரிந்த முல்லைபோல்-சிரித்து கவர்ந்திழுக்கும் கண்ணு குட்டிகள் தூங்கி எழுந்ததும் துள்ளிவரும் பாங்கினை  பார்த்தாலே  சிரிக்கும் ஏங்கி என்னை அள்ள துடிக்கும்- அன்போடு தூக்கியதும் முத்தம் கொடுக்கும் மழை வந்தாலே  பல் இளிக்கும் மறைந்து ஓடி முழுதும் நனையும் மறுநாள் காய்ச்சல் வந்தாலும்-கவலையின்றி மறக்காம திரும்பவும் செய்யும் குரங்கு போல சேட்டை செய்யும் கூப்பிட்டவுடன்  பயந்து நடிக்கும் விலங்கு போட்டால் வீட்டுப் பாடம்-முழுவதும் விரைவுடனே  விந்தையாக செய்திடும் வீடு பாடம் செய்ய சொன்னா விடியகாலை செய்வேன் என்று ஓடிபோகும் உட்கார்த்தே சாப்பிடும்-அம்மாவிடம் கூடி பேசிய கும்மாலத்தையும் சொல்லும்

ரசித்தவர்கள்