Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே இல்லறம் சிறக்குமே  கண்டீரா இன்னலும் தீர்ந்திட சென்றிரா இன்பமாய் இனியச் சுற்றுலா மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த மிதமாய் குளிரும் தரைபகுதியும் நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும் நிலமேத் தெரியாத பணிப்பகுதியும் உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே துன்பமும் நீங்கிடும் துணையாலே தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில் அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில் அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா பண்பையும் நன்றே மாற்றிடும் பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும் இன்பமாய் சிலநாள் இருந்தால் இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம் ---கவியாழி---

ரசித்தவர்கள்