தெய்வங்கள்

தெய்வங்கள்

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது

மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்

ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே

அய்யா பெரியவர்  என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்

அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்


Comments

  1. வீசைக் கணக்கினில்
    மீசை இருப்பது மட்டும்
    வீரமில்லை என்கிற பாடலை
    நினைவுறுத்திப் போகுது தங்கள் பதிவு

    ReplyDelete
    Replies
    1. பாட்டுக்குத்தலைவன் நீங்க சொன்னா சரிதான்

      Delete
  2. // ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
    ஆசைக் கொண்டே வளர்திடுவர்
    ஆயுள் முழுக்க சிலபேரோ
    அதையும் துறந்தே இருக்கின்றனரே
    //

    நிதர்சனமான வரிகள்

    ReplyDelete
  3. நல்லாவேச் சொன்னீங்க ஐயா...

    ReplyDelete
  4. மீசை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க.

    அழகான பாடல்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வெற்றிவேல்

      Delete
  5. மீசைக்கு ஒரு கவிதையா!? ரைட்டு

    ReplyDelete
  6. ஆண்களுக்கு மீசை அழகு என்பது என் கருத்து

    ReplyDelete
  7. மீசை எல்லோருக்கும் அழகு என சொல்லிவிட முடியாது !
    மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா ..பாடல் நினைவுக்கு வருகிறது !

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா அன்பரே

      Delete
  8. வட இந்தியர்கள் மீசை வைப்பதில்லை.
    ஆனால் நமக்கோ இங்கு அது ஒரு வீரத்தின் அடையாளம்.
    மீசையைப் பற்றிய நுணுக்கமான வேடிக்கையான
    பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னால் இயன்றதை இயல்பாய் சொல்கிறேன்

      Delete
  9. தூசு தூசு என்று துரத்திவிட்டாலும் யாவையுமே
    மீசைமேல் கொண்ட ஆசை
    ஆயுள்வரை போகாதென்று அசத்தலாக வடித்த கவி அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க இளமதி

      Delete
  10. அழகான கவிதை... ரசித்தேன்.

    ReplyDelete
  11. மீசைக் கவிதை அருமை! ஒரு காலத்தில் மீசை வைத்து பின் எடுத்து பின் வளர்த்து இப்போது விட்டு விட்டேன்! பழைய நினைவுகள் கிளறிவிட்ட கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி மழித்தாலும் தவறில்லையே

      Delete
  12. மீசை இல்லாத ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா? உங்கள் அனுபவம் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

      Delete
  13. வணக்கம்

    மீசை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. மீசை மீது ஆசை வைத்து ஒரு கவிதை!

    ReplyDelete
  15. நல்லா சொல்லி நிருக்கீங்க ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  16. மீசை அனைவருக்கும் அழகான ஆசை தான். கவிதை வரிகள் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more